Author: பதாகை
வாசவதத்தை – 2

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்
சூன்யத்தின் இசை
“அதிகாரம் என்பது செலுத்துவதற்கு மட்டுமல்ல, ஏற்றுக் கொள்வதற்கும் உகந்ததாக இருக்க வேண்டும்” விஷ்ணுகுப்தர் அடிக்கடி சொல்வதுண்டு. பெரும் சுண்ணாம்புக்கற்களைக் அடுக்கி வைத்து, இடைவெளியில் சிறிய கற்களை உடைத்து நிரப்பி, எழுப்பப்பட்டு, இரண்டு அடுக்கு சுற்றுசுவர்களை கொண்ட ராஜகிருகக் கோட்டையைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு விஷ்ணுகுப்தரின் போதனைதான் நினைவுக்கு வருகிறது. ஹர்யாங்கர்களின் பேரரசனான ஷ்ரேனிகனின் காலத்திலிருந்தே ராஜகிருகம் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டது என்று சொல்கிறார்கள். கோசலம், காசி, பாஞ்சாலம், கலிங்கம், குரு வம்சத்தார், இக்ஷ்வாகுகள், மைதிலர்கள், சுரசேனர்கள், லிச்சாவியரிலிருந்து சிந்துநதி தீரத்து மாத்ரர்கள்வரை ராஜகிருகத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில் எவருக்கும் சுணக்கம் இருந்ததில்லை. (more…)
காதலர் தினம்
பிப்ரவரி 14
ஏதேதோ செய்து திருத்தப்பட்ட முகம்
காற்றில் அலையும் கேசம்
புதிய வாசனை
கண்களை இம்சிக்கும் நிறத்தில்
இறுக்கமான உடை
இரண்டு வருடங்களையாவது
குறைத்துக் காண்பிக்க வேண்டிய நிர்பந்தம்
எதற்கென்றே தெரியாதொரு அசட்டுப் புன்னகை
ஏதோ, ஐம்பது பேராவது வீழ்ந்தால் சரி.
– அதிகாரநந்தி
கிணற்றுப் பிரசங்கி
அந்தக் கிணற்றில் ஒரு தவளை இருக்கிறது
இலக்கியம் என்கிறது இசை என்கிறது
ரசனை என்கிறது கலை என்கிறது
அரசியல்கூடப் பேசுகிறது
லோகக்ஷேமத்தைப் பற்றிக்கூடச் சிந்தித்திருக்கிறது
வறுமையை ஓடஓட விரட்டுவேன் என்கிறது
எந்தப் பிரச்சனை குறித்தும் பேசும் தவ
வலிமையை அடைந்து விட்டிருக்கிறது
முந்தாநாள் நடந்த பிரசங்கத்தில்கூட
கிணற்றுள்ள தவளைகளெல்லாம் ஆச்சரியப்பட்டுப் போயின
எவ்வனொரு சிந்தனைச் செறிவென்று கொண்டாடின.
– அதிகாரநந்தி