Author: பதாகை

சமகால கவிதைகளின் சிக்கல் – ரேமண்ட் ஹாரிஸ் நேர்காணல்

The New York Quarterly என்ற கவிதை காலாண்டிதழ், மற்றும் New York Quarterly Books என்ற அச்சு நூல்களின் பதிப்பாசிரியர் ரேமண்ட் ஹாமண்ட். இவர் பலரால் மதிக்கப்படும் கவிஞரும்கூட. Poetic Amusement என்ற விவாதநூல் எழுதியவர். இவரோடு அனிஸ் ஷிவானி நிகழ்த்திய ஒரு மின்னஞ்சல் நேர்முகத்தின் சிறு பகுதி இங்கு தமிழாக்கப்படுகிறது. நேர்முகத்தின் முழு ஆங்கில வடிவை இங்கு வாசிக்கலாம் .

பழகிய பாதைகளில் பயணிக்கும்,  மரபார்ந்த அச்சிதழ்களில் துவங்கி, avant garde இணைய இதழ்கள் வரை எண்ணற்ற இலக்கிய இதழ்கள் இருக்கின்றன. The New York Quarterlyயின் தனித்தன்மை என்ன? வேறெங்கும் கிடைக்காத எது உங்கள் இதழின் கவிதை வாசகர்களுக்குக் கிடைக்கக்கூடும்? ரோலிங் ஸ்டோன் ஒரு முறை அமெரிக்காவின் சிறந்த கவிதை பத்திரிக்கை என்று The New York Quarterlyயை அழைத்தது. அவர்களுக்கு இப்போதும் கவிதையில் ஆர்வம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், இன்றும் உங்களைச் சிறந்த பத்திரிக்கையாகக் கருதுவார்களா?

சிறந்த பத்திரிக்கை என்று எங்களைச் சொல்லக்கூடாது என்று நினைக்கிறேன். விசாலமான பார்வை கொண்ட இதழ் என்றோ, பரந்துபட்ட படைப்புகளுக்கு இடமளிக்கும் இதழ் என்றோ, அதிக அளவில் சாதாரண வாசகர்களால் வாசிக்கப்படும் பத்திரிக்கை என்றோ சொன்னால் நன்றாக இருக்கும். ‘சிறந்தது’ என்று சொல்லும்போது உயர்ந்தது என்ற பொருள் வருகிறது. அப்படிப்பட்ட ஒரு தீர்மானம் தனி நபர் ரசனை சார்ந்த முடிவு என்பது நம் எல்லாருக்கும் தெரியும் – அல்லது நமக்கு அது தெரிந்திருக்க வேண்டும். இதைச் சொன்னாலும், அவர்கள் அன்று அவ்வாறு அழைத்த நாள் முதல் இன்றும், உயர் அடுக்கில் உள்ள இலக்கிய இதழ்களுக்கு இணையான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன். (more…)

நகரம்

கையில் தேநீர் கோப்பையுடன்
நான் பால்கனியில் நின்று
பார்க்கும் பொழுது

கீழே
பாம்பை போல் நெளியும் பாதையையும்
புகை கக்கி செல்லும் வாகனங்களையும்
மரங்களும் மலர்களும்
மறைக்கின்றன

சற்று நேரத்தில்
என்னையும் தன்னுள்
இழுத்துக் கொள்ளும்
இந்த நகரம்

சட்டென்று திரும்பி
ஒலிக்காத கைபேசியை
உற்று பார்க்கிறேன்​

என்னுள் இருக்கிறது
நகரம்

கவியின்கண் – 2 “கொள்வன் கொல்லோ?”

அதியமான் நெடுமான் அஞ்சிக்காக ஔவையார்  பாடியதாக இது-

இல்லா கியரோ, காலை மாலை!
அல்லா கியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளா தோனே?

(புறநானூறு – 232) (more…)

வாசவதத்தை – 1

– ஸ்ரீதர் நாராயணன் –

 

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்
சூன்யத்தின் இசை

‘ஆசையை அறுத்தவர்களுக்கு அரசனாக இருந்தாலும் புல்லைப் போலத்தான். ஆனால் ஆசையின் இருப்புதான் அரசனின் விழுமியங்களில் முதலானது….’ விஷ்ணுகுப்தரின் குரல் அந்த நடுநிசியிலும் தலைக்குள் ஒலித்துக் கொண்டிருப்பது போல் இருந்க்கிறது அவனுக்கு. தலையை உதறி நினைப்பைத் தள்ளியபடிக்கு புரள்கிறான். (more…)

வண்ணத்துப்பூச்சி வரம்

– ஸ்ரீதர் நாராயணன் –

படபடவென சிறகடித்துப் போகும் பட்டாம்பூச்சிகளை பார்க்கும்போதெல்லாம் அவருக்கு அப்படியொரு களிப்பு. தம் கள்ளமில்லா தூய்மையால் அவை பூவுலகை நிறைத்துக் கொண்டிருப்பதாக பெருமை.

காற்றில் தவழ்ந்து வந்து கைமேலேறி அமர்ந்த வண்ணத்துப்பூச்சியை வாஞ்சையோடு தடவிக் கொடுக்கிறார்.

‘சிறு எறும்பு கூட தன் எதிர்ப்பை தெரிவிக்காது இறப்பதில்லை. எந்த ஜீவராசிக்கும் தற்காப்புக்கு போரிடும் நியாயம் உண்டு. பாவம் நீங்கள். இப்படி வலிமையற்ற வெகுளிகளாகவே தேங்கிவிட்டீர்கள். எங்கோ ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது’ (more…)