எஸ். சுரேஷ்

கவிப்பித்து

எஸ். சுரேஷ்

வளைந்து நெளிந்து செல்லும் பாதை
மங்கை மேக கூந்தலா,
பாம்பைப் போல் உள்ளதா?

உயரே தகிக்கும் சூரியன்
யாருடைய சுட்டும் சுடர் விழி?
அதோ நடந்து செல்லும் மங்கை
கொடியிடையாளா,
இடையே இல்லாதவளா?

அங்கே மேலிருந்து விழும் பறவையின்
சிறகு காற்றில் என்ன எழுதுகிறது?
பறவை பறந்து போன பின் மனம்
அந்தக் கிளை போல் அசைகிறதா?

வருடிச் செல்லும் காற்று பெண்ணின் ஸ்பரிசமா
சாயங்காலம் யாரது வானத்தில் கோலம் இடுவது?
குளத்துக்குள் தவளை ஒன்று குதிக்கிறது
பளுக் என்ற சப்தம் கேட்கிறதா?

பந்திபூர், மார்ச், 2014

– எஸ். சுரேஷ் –

“Or ask why notebooks (Simone Weil), diaries (Kafka), letters (Wallace Stevens) – fragments, ruins – the incomplete – are better (in)formed, and always tell us more.” –La pesanteur

காதுக்குள் ஒலி ஈர்க்கும் காந்தம் இருப்பதுபோல்
மெல்லிய சப்தம் கேட்டு கழுத்தைச்
சட்டெனத் திருப்பும் புள்ளிமான்கள் எல்லாம்
அமைதியாய் ​ ​நின்று கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தில்
ஒரே ஒரு கன்னிமான்
அங்கும் இங்கும் தாவிக் குதிக்கிறது.

அசையாமல், அமைதியாய், மரங்களின் நடுவில்,
தீராத காமத்தைத் தன்னுள் அடக்கிக்கொண்டு
வெளியுலகுக்கு புத்தனைப் போல் காட்சியளித்து நிற்கிறது
பெரிய தந்தங்கள் கொண்ட ஒற்றை யானை.

சுண்ணாம்பு பூசிய உடல், கரி பூசிய முகம், வானுயரும் வால்.
பழங்களின் ருசி அலுத்துப்போன குரங்கு
மானிட வருகைக்காக சாலையோரம் வந்தமர்கிறது.

பள்ளிக்கு நேரமாகிவிட்டது போல் விரைகிறது
காட்டுப்பன்றி,
அதன் பின்னால் வரிசையாய் நான்கு
பன்றிக் குட்டிகள்.

மரங்களின் நடுவில் விழும் சூரிய ஒளியில்,
மஞ்சள் நிற இலைகளில், அசையும் புதர்களில்,
எங்கும் புலியைத் தேடுகின்றன என் கண்கள்;
காண முடியாத அந்தப் புலி
காடெங்கும் வியாபித்திருக்கிறது.

மழை வரும் தருணத்தை எதிர்பார்த்து நிற்கிறது
ஒரு மயில்,
அதன் தோகை விரியும் தருணத்தை எதிர்பார்த்து
நான்.

உண்பதற்கே உணவு, ருசிப்பதற்கன்று
என்ற பெரும் தத்துவமறிந்த ஞானி போல்
புல்லை மென்று கொண்டிருக்கிறது காட்டெருமை.

இலைகளின் சலசலப்பு, பறவைகளின் கூக்குரல்,
உஷ்ஷ் என்று மரங்களை வருடிச் செல்லும் காற்று,
குரங்குகளின் கூச்சல், பூச்சிகளின் இடைவிடாத சப்தம்
என்று அடங்காத பேச்சு ஓயாத சலனத்தில்
இருக்கிறது காடு –
என்னுள் பேரமைதி.

மெஹருன்னிசா

– எஸ். சுரேஷ் –

அந்தப் பெண் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டிருந்தாள். அந்த பையனோ சிரித்துக்கொண்டே ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிக் கொண்டு போனான். இதைப் பார்த்த பஷீர் பாய், “எப்படி இன்டீசென்ட்டா இருக்காங்க பாரு. இவங்க ஒத்தர ஒத்துரு சீக்கிரமா கைவிட்டுடுவாங்க. ஒத்தர ஒர்த்தரு கைவிடாத ஒரு காதல் கத சொல்றேன். உட்காருங்க,” என்றார்.

“காதல் கதையா?” என்று நான் இழுத்தேன்.

“ஆமாம்டா. உனக்கு எப்போவும் பேய் கததான் வேணும். உட்கார்ந்து இந்தக் கதைய கேளுங்க” என்று உத்தரவிட்டார் பஷீர் பாய். நாங்கள் எல்லோரும் திண்ணையில் அவர் அருகில் உட்கார்ந்தோம்.

“மெஹருன்னிசா எங்க உறவுக்கார பெண். அவ ராகவன்னு ஒரு பையன காதலிச்சா. ராகவன் ஒரு பம்மன். அதிலும் அவன் ஒரு நாமம்தார்,” என்றார் பஷீர்.

“ஐயங்கார்,” என்றான் மோகன். அவன் ஒரு ஐயங்கார். அவனுக்கு ஐயங்கார்களை நாமம்தார் என்று கூப்பிட்டால் கோபம் வரும்.

“உன்னப் போலதான்டா” என்றார் பஷீர் பாய் மோகனைப் பார்த்து. (more…)

கவியின்கண் – 10 : “விலை, மதிப்பல்ல.”

– எஸ். சுரேஷ் –

‘தன்விபரக் குறிப்பு எழுதுதல்

என்ன செய்ய வேண்டும்?
விண்ணப்பப் படிவத்தை நிரப்பி
தன்விபரக் குறிப்பு இணைக்க வேண்டும்.

எத்தனை காலம் வாழ்ந்திருந்தாலும்
தன்விபரக் குறிப்பு சுருக்கமாய் இருத்தல் நலம்.

திட்டமான, தேர்ந்தெடுத்த தகவல்கள் அவசியம்.
நிலத்தோற்றத்தின் இடத்தில் முகவரிகள்,
தடுமாறும் நினைவுகளுக்கு, அசைக்க முடியாத தேதிகள். (more…)

காய்ந்த சருகு

– எஸ். சுரேஷ் –

““Our world, like a charnel-house, lies strewn with the detritus of dead epochs.” – Le Corbusier, Urbanisme

கிணற்றில் எட்டிப் பார்க்கிறேன்
நீல ஆகாசம்
பளிச்சென்ற சூரியன்
உள்ளிருந்து எட்டி பார்க்கும் என் பிம்பம்

ஏதோ தண்ணீரில் விழுகிறது

வானம், சூரியன், பிம்பம் கலைந்து
ஒன்றாகின்றன மெல்ல மெல்ல

ஆட்டம் தணிந்து பிரிகின்றன

ஒரு காய்ந்த சருகு, மெல்ல
ஆடிக்கொண்டு ஆடிக்கொண்டு
கண்ணை மறைத்து அமர்கிறது

நீல வானம்
தகிக்கும் சூரியன்
பாசி படிந்த பழைய கிணறு
என்னைத் தழுவிச்செல்லும்

சில்லென்ற காற்று
ஒலி எழுப்பும் பறவைகள்