(1987ஆம் ஆண்டு குற்றாலம் கவிதைப்பட்டறையில் வாசிக்கப்பட்டு நட்புறவுப்பாலம் இதழில் திருத்தி எழுதப்பட்ட கட்டுரையின் பகுதி)
வாழ்க்கைப் பார்வையில் மனவேகம் ஆத்மவிசாரமாக மாற்றம் பெறும்போது, உணர்வுகளும் தத்துவக்கோலம் கொண்டு விடுகின்றன என்பது என் அனுபவம்.
ஒரு கவிஞன் தன்னியல்பாகவே சிந்தனையாளனாகவும் இருக்கிறான்; தனக்கு வாய்க்கப்பெற்ற உள்ளுணர்வினால் விஷயங்களை ஊகித்து அறிந்து கொள்கிறான்; தர்க்கரீதியாகவோ காரண காரியங்கள் வழியாகவோ அல்லாமல், புலன்கூர்மை காரணமாகவே சூட்சுமமாக உணர்ந்து கொள்கிறான். ஒரு கட்டத்துக்குப் பிறகு, யதார்த்தங்கள் வெறும் விழுதுகள்தாம் என்று கண்டுகொள்கிறான்; அடிப்படையான உண்மைகள் என்கிற வேர்கள் அவனுக்கு மலைப்பைத் தருகின்றன. அப்போது உணர்வுக் கொந்தளிப்புகள் அடங்கி, தத்துவப்பார்வை ஏற்பட்டு விடுகிறது; சமவெளியில் இறங்கிய நதி போல் ஆகிறது அவன் கவிதை. என் சமீபத்திய கவிதைகள் பலவும் அதுபோலத்தான். இங்கே இரண்டு எடுத்துக்காட்டுகள்: