–வெ கணேஷ்–
மனதில் அந்தப் பெயர் ஓடிக் கொண்டிருந்தது. சரவண ரவி. சரவண பவ எனும் திருமந்திரம் என்கிற கர்னாடக இசைப் பாடல் ஒன்று உண்டு. சாமி பேரை சொன்னாலாவது போகும் வழிக்கு புண்ணியம் உண்டு. அது என்ன பேர்! சரவண ரவி. ஐம்பது வருடத்திற்கு முன் அந்த பேரை கேள்விப்பட்ட பிறகு அந்தப் பெயர் கொண்ட வேறொருவர் யாரைப் பற்றியும் இன்று வரை கேள்விப்பட்டதுமில்லை ; சந்தித்ததுமில்லை..
சரவண ரவி! மிகவும் வித்தியாசமான பெயர் ; உச்சரிக்கும் தருணங்களிலெல்லாம் மாறாத புன்முறுவல் பூக்கும்.
சித்தார்த் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து தன் நண்பர்களின் போட்டோ மற்றும் குறிப்புகள் அடங்கிய ஒர் இணையப் பக்கத்தை பல மணி நேரங்களாக பார்த்துக் கொண்டு இருப்பானே! அவனிடம் சொல்லி இந்த பெயர் உடையவர்களை தேடச் சொல்ல வேண்டும். பேரன் கிருபாவிடம் சொல்லியாவது தேடச் சொல்ல வேண்டும். (more…)
