மொழியாக்கம்

“நான் எழுத்தைக் கொண்டு யோசிக்கிறேன்”- ரிச்சர்ட் ரூஸோ – சில நேர்முகங்கள்

பீட்டர் பொங்கல்

ரிச்சர்ட் ரூஸோவின் அண்மைய நூல், “Elsewhere” என்ற தன்வரலாற்று படைப்பு. இது குறித்து, “கடந்த பல ஆண்டுகளில் மிகவும் நேர்மையான, நெகிழ்ச்சியான அமெரிக்க நினைவு நூல்களில் இது ஒன்று”, என்று குறிப்பிடுகிறார் மிகேல் ஷ்வாப் http://www.npr.org/2012/11/16/163952390/elsewhere-has-beauty-but-no-happy-ending.

டெய்லி பீஸ்ட் தளத்தில் ஜேன் சியாபட்டாரியுடனான நேர்காணலின்  இந்த நூலில் வரும் விஷயங்களைப் பேசுகிறார் ரிச்சர்ட் ரூஸோ. அவற்றின் சில பகுதிகள் இங்கு:

நீங்கள் எல்ஸ்வேர் எழுதக் காரணமாக இருந்தது எது?

கிராண்டாவில் பதிப்பாசிரியராக இருக்கும் ஜான் ஃப்ரீமன் மிக முக்கியமான ஒரு காரணமாக இருந்திருக்கிறார். வீடு திரும்புதல் பற்றிய ஒரு இதழ் தொகுக்கும் திட்டத்திலிருந்தார் அவர். நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவர் க்ளோவர்ஸ்வில் செல்லும் வழிகாட்டிக் குறியைப் பார்த்திருக்கிறார். மெய்யுலகில் உள்ள அந்த இடத்தைப் பற்றி நான் எழுதினாலும் எழுதக்கூடும் என்ற எண்ணத்தில் அவர் என்னைத் தொடர்பு கொண்டார். இதுவரை பல்லாண்டுகளாக நான் அதன் புனைவு அவதாரங்களைதான் பயான்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேன்.

அந்த சமயத்தில் நான் அதை ஒப்புக்கொள்ளக்கூடிய மனநிலையில் இருந்தேன். என் அம்மா அப்போதுதான் இறந்திருந்தார். அம்மாவின் வாழ்வும் சாவும், க்ளோவர்ஸ்விலுடன் எங்களுக்கு இருந்த ஆழ்ந்த உறவு, எனக்கும் என் அம்மாவுக்கும் பொதுவானவையாக எவ்வளவு விஷயங்கள் இருந்தன என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஜான் என்னை அழைத்தார். எங்கள் பிறப்பு (நாங்கள் இருவருமே அப்சஸிவ்வான ஆட்கள், என் அம்மா அளவுக்கு நானுமே மனசில் ஒன்று தோன்றிவிட்டால் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பவனாக இருக்கிறேன்), எங்கள் வளர்ப்பு (நாங்கள் இருவருமே காலம் தொடாத சிற்றூர் ஒன்றில் வளர்ந்தவர்கள்). அந்த சமயம் பார்த்து ஜான் என்னை அழைத்திருக்காவிட்டால், நான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்க மாட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு அவ்வளவு அதிகம் ஏற்பட்டதில்லை. இந்தப் புத்தகம் இப்படிப்பட்ட உணர்வுகள் அத்தனையையும் தணித்திருக்க வேண்டும். (more…)

மோசமான ரசனையின் பிறப்பு – பாரி ஷ்வாப்ஸ்கி

The Nation என்ற தளத்தில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரையின் சற்றே தளர்ந்த தமிழாக்க வடிவம் 

Henri Matisse குறித்து ஒரு சம்பவம் சொல்லப்படுவதுண்டு. மாட்டிஸ் வரைந்த உருச்சித்திரங்கள் (portraits) ஒன்றில் உள்ள ஒரு பெண்ணின் கை மிக நீளமாக இருக்கிறது என்று அவரைச் சந்தித்தவர் ஒருவர் குறை கூறினாராம். “மேடம், நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்,” என்று பதில் சொல்லியிருக்கிறார் மாட்டிஸ். “இது பெண்ணல்ல, ஓவியம்”. மாட்டிஸ் இப்படிச் சொன்னதற்கு அவள் இது போன்ற ஒரு பதில் சொல்லியிருக்கலாம், “இது வாதமல்ல, பிடிவாதம்”. ஓவியரின் இந்தக் கேலிப் பேச்சைக் குறித்து ஈ.ஹெச். கோம்ப்ரிச் (E.H. Gombrich) இவ்வாறு எழுதுகிறார்: “நெடுங்காலமாக இவர்களைச் சகித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களோடு நவீன ஓவியர்களும் விமரிசகர்களும் விளையாடிப் பார்க்கும் முரணுரைகளில் (paradox) இதுவும் ஒன்று” (கோம்ப்ரிச்சின் மிகச் சிறந்த ஆய்வு நூலான ஆர்ட் அண்ட் இல்யூஷனில்தான் மேற்கண்ட சம்பவம் பற்றிய குறிப்பு இருக்கிறது).

இது போன்ற முரணுரைகளைத் தவிர்ப்பது மிகக் கடினம். ஓவியங்களைக் கொண்டு உருச்சமைத்தல் (pictorial illusionism), அதாவது, “நம்பும்படி காட்சியளிக்கத் தவறிய பிம்பங்கள் குறித்து மேற்கத்திய நாகரிகம் குறிப்பிட்ட சில காலகட்டங்களில் அடைந்த அதிருப்தியின் தூண்டுதலால்” உண்மை போல் தோற்றமளிக்கும் ஓவியங்களின் ஐரோப்பிய ஆதர்ச தொகுப்பு ஒன்று (European canon of realistic representation) உருவானது என்று கோம்ப்ரிச் கருதினார். அவரது கூற்றே முரணுரைத்தன்மை கொண்டதாக இருக்கிறது. காரணம், ஒரு பிம்பத்தை நம்ப விழைந்தவர்கள் எவர் என்ற கேள்வியை இது தவிர்க்கிறது. மாட்டிஸ் வருவதற்கு வெகு காலம் முன்னரே, மானரிஸ்ட்டுகள் (Mannerists) என்று அறியப்பட்ட பதினாறாம் நூற்றாண்டு இத்தாலிய ஓவியர்கள் தங்கள் ஓவியங்களிலுள்ள உருவங்களைப் பிறழச் செய்து பிழை பரிமாணங்களில் வரையத் தயாராய் இருந்தனர். அவர்கள் இப்படிச் செய்தது, நம்பத்தகுந்த பிம்பங்களைத் தோற்றுவிப்பதற்கல்ல, மாறாய், நம்பத்தகுந்த ஓவியங்களைப் படைக்கும் நோக்கத்தில் இதைச் செய்தனர். (more…)

மொழியாக்கம்- மொழிகளைக் கடந்த வாசிப்பின் சாத்தியம்

akrphoto7_courtesy-ramanujan-estate_1

பொதுவாக நாம் மொழிபெயர்ப்பு கவிதைகள் சொல்லுக்கு சொல் மொழிபெயர்க்கப்பட வேண்டும், அல்லது, அவற்றின் அடிப்படை உணர்வுகளை வெளிப்படுத்தினால் போதும் என்பது போல் நினைக்கிறோம். எனவே ஒரு மொழிபெயர்ப்பை அணுகும்போது அது மூல மொழியிலிருந்து வேறுபடுவதில் ஏதோ ஒரு தவறு நிகழ்ந்து விட்டதுபோல் பார்க்கிறோம் – நமக்கே நன்றாகத் தெரியும், இப்படிப்பட்ட பிழைபெயர்ப்புகளை ஓரளவுக்கு மேல் தவிர்க்க முடியாது என்று. இந்நிலையில், இந்த இழப்புகளிலிருந்து வேறு ஏதோ ஒன்றை மீட்பதற்கான வழியை நாம் காண இயலுமா என்ற கேள்வியை எழுப்புவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்று நினைக்கிறேன். (more…)

டோல்கீனின் பேவொஃல்ப்: மான்ஸ்டர்களை வீழ்த்துதல்

 
 
டோல்கீன் தன் ‘பேவோல்ஃப்’ மொழிபெயர்ப்பைத் தனியாய் எடுத்து வைத்திருக்கலாம், ஆனால் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப்பின் அவர் இது குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். அந்தக் கவிதை குறித்த மிகச் சிறந்த கட்டுரை என்று மட்டுமல்ல, பலர், இது ஆங்கில இலக்கியத்தின் மிக அருமையான கட்டுரைகளில் ஒன்று என்றும் கருதுகின்றனர். இதுதான் அந்தக் கட்டுரை “பேவொல்ஃப்: மான்ஸ்டர்களும் விமரிசகர்களும்”. விமரிசகர்களுக்கு மான்ஸ்டர்கள் மேல் என்று நினைத்தார் டோல்கீன். கவிதையின் பொருள் புறக்கணிக்கப்பட்டு, தொல்பொருள் மற்றும் மொழியியல் ஆய்வுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது என்பது அவரது கருத்தாக இருந்தது. பேவொல்ஃப்பில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது, எந்த அளவுக்கு கற்பனை உள்ளது? அண்மையில் கண்டெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகளுக்கு அதனுடன் உள்ள உறவு என்ன?

(more…)

முகத்தின் மறுபக்கம்

wagstrom-thomas
Karl Ove Knausgaard எழுதிய முகத்தின் மறுபக்கம் என்ற நீண்ட கட்டுரையின் தமிழாக்கப்பட்ட சிறு பகுதி: முழு கட்டுரையையும் இங்கே வாசிக்கலாம்

பின்னங்கழுத்தை நினைத்துப் பார்க்கும்போது முதலில் மனதில் தோன்றுபவை கில்லட்டின்கள், சிரச்சேதங்கள், மரணதண்டனைகள். இது சிறிது வினோதமாகவே இருக்கிறது – ஏனெனில் நாம் வாழும் தேசத்தில் மரண தண்டனைகள் விதிக்கப்படுவதில்லை – இங்கு கில்லட்டின்கள் இல்லை, எனவே நம் பண்பாட்டில் சிரச்சேதம் முழுமையாகவே ஒரு விளிம்புநிலை நிகழ்வாக இருக்கிறது. என்றாலும்கூட, பின்னங்கழுத்து என் நினைவுக்கு வரும்போது, வெட்டி வீசு என்று நினைத்துக் கொள்கிறேன். (more…)