இது எத்தனையாவது முறையென்று
தெரியவில்லை
கதவைத் திறந்த நாழியில்
வாயிலோரம் அண்டிக்கிடந்த
சாம்பல் நிறப் பூனையை
காலால் உதைத்தெறிந்தான்
பக்கத்துவீட்டுக்காரன்
பின்னரும் ஒரு சிறு கல் கொண்டு
சில துர் வார்த்தைப் பிரயோகத்துடன்
அதன் திசையில் ஓங்கியடிக்க
காற்றில் கலந்து மறைந்த அப்பூனை
சில நிமிடங்களுக்கப்பால்
அதே கதவருகாமையில்
தஞ்சமடைந்துகொண்டது
அறிவில்லைதான்
மீண்டும் மீண்டும் வந்தமர்ந்துகொள்ளும்
அப்பூனைக்கும்
மீண்டும் மீண்டும்
அப்பக்கத்து வீட்டுக்காரனை
புன்னகைத்தபடிக் கடக்கும் எனக்கும்.