மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : எத்தனை இலை தழைகள் மற்றும் இதர வஸ்துக்கள் போட்டு கொதிக்க வைத்துச் சாப்பிட்டாலும் கனிபலைஸ் செய்வது சுவைக்காக அல்ல. கொடுஞ்சுவையாக இருக்குமென்றாலும் இதயத்தை எடுத்துத் துண்டம் போட்டுச் சாப்பிடுவது அன்னிய அடையாளத்தை அழித்து ஆற்றல்களை உட்கொள்ளவே. இத்தகைய கனிபலியங்கள் பிற மொழி படைப்புகளின் இதயத்தைக் கொணரும் நோக்கத்தில் செய்யப்படுகின்றன, சுவையின் பொருட்டல்ல.
ஊர்வலத்தில் பெய்யும் மழையாய் இருக்கும் விருப்பம் எனக்கில்லை- அதிலும், நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கும் ஓர் ஊர்வலத்தில், ஒப்பீட்டளவில் அபூர்வமாய் நிகழும் ஊர்வலத்தில். ஆனால் குளிரிலும் மழையிலும் வரிசை கட்டி நின்றிருந்த அனைவரின் சார்பிலும் பேசுவதானால், ஒரு சிறு விஷயத்தைப் பதிவு செய்தாக வேண்டும். சரியாகச் சொல்வதானால் இதை ஒரு குற்றமாகச் சொல்ல முடியாதுதான், இந்த ஊர்வலத்தின் சில பகுதிகள் ஏற்கனவே இந்த வட்டாரங்களைக் கடந்து சென்றிருக்கின்றன என்பதை மட்டும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (more…)