ஓரிரு வருடங்கள்தான் ஆகியிருக்கும். அப்போது நான் ஒரு வருடமாக காதன்பர்க்கில், ஸ்வீடனில் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு ராஜஸ்தானிய நண்பரின் ப்ளாட்டில் நானும் ஒண்டிக்கொண்டிருந்தேன்.
என்னுடன் இன்னொரு நபரும் ஒட்டிக்கொண்டிருந்தான். என்னை விட பல வருடங்கள் இளையவன் என்பதாலும் ஒரு வாஞ்சையாலும் அந்த ஆந்திரனை அவன், இவன் என்ற ஏகவசனம் அவ்வளவுதான்!
அதுவோர் இலையுதிர் காலம். மதியம் தாண்டியவுடன் காலம் ஸ்தம்பித்து நின்றுவிடும். முடிவே இல்லாத மாலை. அத்தனை வெளிச்சத்தை காலை மணி ஒன்பது என்றால் நம்பலாமே தவிர இரவு மணி ஒன்பது என்று சொல்லவே முடியாது. (more…)
