காதலர் தினம்

எதிரே, பார்க் பெஞ்சில் இருக்கும் பையன்
அவளை நோக்கிச் சாய்கிறான்
காத்திருக்கிறாள் அவள்
 
உதடுகள் சந்திக்க
 
கண் அகலாமல் பார்க்கிறார்
அவள் முகம் விலகி மறைவதை
உதடு பிரியாமல் அவள்
மெல்லச் சிரித்துக் கொள்வதை
 
மகிழ்ச்சியைத் தணிக்கும்
குற்றவுணர்வு
 
அந்தி வெயிலின் ஒளியில் 
களைத்த தன் கண்களை
மூடிக் கொள்கிறார் முதியவர்

மணநாள் இரவின்
நிலை கொள்ளாத் தவிப்பு
தொடுகையில்
அதிரும் அவள் உடல்
மெல்ல அவிழ்ந்த சேலை

படர்கையில் கூடிய
மல்லிகை மணம்
                               – எஸ். சுரேஷ்

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.