பூச்சி

– கமலாம்பாள்-

தூரத்து அண்டத்தின்
ஓர் துகள்;
இரவின் இருளில்
சிறு உயிர்;
சிறு கடி; சிறு வலி;

பு ச் சி

பார்வையின் விளிம்பின்
ஒரு ஓரம்;
உற்றுப் பார்த்தால் நகரும்;
வாய் மட்டும்தான்;

புபூ ச்ச் சிசீ

ஒன்றுதான்..ஆனால்
எங்கும் எதிலும்;
சிதறிய கண்கள்;
விழித்துக்கொள்கிறது
மூன்றாவது கண்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.