– கமலாம்பாள்-
தூரத்து அண்டத்தின்
ஓர் துகள்;
இரவின் இருளில்
சிறு உயிர்;
சிறு கடி; சிறு வலி;
பு ச் சி
பார்வையின் விளிம்பின்
ஒரு ஓரம்;
உற்றுப் பார்த்தால் நகரும்;
வாய் மட்டும்தான்;
புபூ ச்ச் சிசீ
ஒன்றுதான்..ஆனால்
எங்கும் எதிலும்;
சிதறிய கண்கள்;
விழித்துக்கொள்கிறது
மூன்றாவது கண்.