கடும் வெயில்
தாகம்
தொண்டை வற்றியிருந்தது
நடந்து அந்த கிணற்றை அடைந்தேன்
கயிறும் இல்லை வாளியும் இல்லை
கீழே பளபளக்கும் குளிர் நீர்
“ஆஆஆஆ” என்று நீரை பார்த்து கத்தினேன்
கிணற்றுக்கருகில் உட்கார்ந்திருந்த காக்கை
பீதியுடன் அங்கிருந்து பறந்தது
சற்று நேரம் கழித்து வாயில் ஒரு கல்லுடன் வந்து
மறுபடியும் கிணற்றுச் சுவர் மேல் உட்கார்ந்து
கல்லை தண்ணீரில் போட்டுவிட்டு
என்னை பார்த்து புருவத்தை உயர்த்தியது