– எஸ். சுரேஷ் –
ஒரு கையில் கல்லும் மறு கையில் மைக்குமாய்
சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தவனை நோக்கி,
அந்த பக்கம் வந்த குள்ள நரி,
“வணக்கம் வாத்யாரே. நல்லா கீரியா?
ஆசிரியர் தின வாழ்த்துகள். வர்ட்டா?”
என்று கேட்டுச் சென்றது.
“பாருடா, ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் எல்லாம்
என்னை இன்னாமா ஞாபகம் வச்சிக்கினுகுறாங்கோ”
என்று கண்கள் கலங்க, நாத்தழுதழுக்க கூறினான்
அந்தப் பேச்சாளன்.