– ஸ்ரீதர் நாராயணன் –
சட்டென நீட்டிய இடக்கையை
புறம்தட்டிவிட்டு
வலக்கையை இழுத்து
ஒருகவளம் சோற்றை வைக்கிறாள்,
அம்மா.
அடுத்த கவளத்திற்கு,
ஈனி மீனி மைனி மோ
கேட்ச் த மங்கி பை த டங்கி
என்று மிழற்றியபடி
இடக்கையில் வந்து நிறுத்திவிட்டு,
அம்மாவிற்கு என்றொரு அரைக்கண
புன்னகையை தந்துவிட்டு
சட்டென வலக்கையை நீட்டுகிறது.
என்றோ இடுப்பு எலும்பு நோக
உந்தித்தள்ளிய உயிர்விதையை
வாரியணைத்து மீண்டும்
வயிற்றில் இட்டுக்கொள்கிறாள்.
எந்த கணக்கு போட்டுத்தான்
என்னிடம் வந்தாயோடி
