பிளான் பி

எஸ். சுரேஷ்

பாடிக்கொண்டிருந்த கழுதை முன் ‘சபாஷ் சபாஷ்’ என்று தலையாட்டி ரசித்துக் கொண்டிருந்தது குள்ளநரி.

கழுதையை ‘குஷிப்படுத்தி’ சிங்கத்திடம் அழைத்துச் சென்றால், சிங்கம் விட்டு வைத்த மீதி தனக்கு கிடைக்கும் என்ற நப்பாசை நரிக்கு.

ரசித்துக்கொண்டிருந்த நரியைக் கண்ட காட்டு மிருகங்கள் கழுதை முன் உட்கார்ந்து பாட்டை ‘ஹும்’ கொட்டி ரசிக்க ஆரம்பித்தன.

இதைக் கண்ட நரி எல்லோரிடமும் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தது.

கிடைத்த பணத்தில் தனக்கொரு மட்டன் பிரியாணியும் கழுதைக்கு ஒரு கட்டு புல்லும் ஆர்டர் செய்தது.

ஒளிப்பட உதவி – mummy-donkey, Deviant Art

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.