குதிரைலாட கோவில்

 காஸ்மிக் தூசி –

 

விலாவில்
ஓங்கி உதைத்ததுபோல
மலைக்குன்றின் பாறையில் தெரிகிறதே
அந்தப் பெரிய வெட்டு,

அங்குதான்
இடியைப் போல இடித்தது
குதிரையின் குளம்பு.

மணப்பெண் பின்னாலிருக்க
குதிக்கையில்
கூழாங்கற்களை தவிர்க்கவேண்டி,

நீலநிறக் குதிரையில்
பள்ளத்தாக்கை
ஒரே குதியில் தாண்டிக் குதித்தார்
கந்தோப நாதர் –

வைக்கோல் போர் போல
மறுபுறமிருந்த
தன்வீட்டை நோக்கி.

பிறகு
மின்னலைப் போல
மூவரும் மறைந்தனர்.

அருண் கொலாட்கர் எழுதிய, The Horseshoe Temple, என்ற கவிதையின் மொழியாக்கம்

கவிஞர் குறிப்பு

ஒளிப்பட உதவி- wikimedia

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.