தத்துவ விசாரணை

எஸ்.சுரேஷ்

 

“ஆரம்பிக்கலாமா?
“பொறு பெரியவர் வரட்டும்” என்றது அந்த ஓநாய்.
மெதுவாகக் குன்றின் மேல் ஏறி வந்தது,
தளர்நடையுடன் ஒரு கிழ ஓநாய்.
“ஆரம்பிப்போம்” என்று சொல்லிவிட்டு,
நிலவைப் பார்த்து, “ஊஊஊஊஊஊஊ,” என்று ஊளையிட்டது.
மற்ற ஓநாய்களும் கூடச்சேர, காடு முழுவதும் ஊளை.
“போதும்யா, எவ்வளவு நேரம் கத்தறது?” என்று கிழ ஓநாய் சொன்னவுடன்
ஊளை நின்றது
குன்றை விட்டு ஓநாய்கள் இறங்கிக் கொண்டிருக்க
குட்டி ஓநாய் ஒன்று மேலே ஓடிவந்தது.
“முடிஞ்சுதா?”
“ஜோலி முடிஞ்சு. வேட்டையாடப் போறோம்,” என்று சொல்லிவிட்டு
எல்லா ஓநாய்களும் சென்றுவிட்டன
தனியாக விடப்பட்ட குட்டி ஓநாய் துக்கம் தொண்டையடைக்க,
நிலவைப் பார்த்து “ஊஊஊஊஊஊஊ” என்று ஊளையிட்டது.
ஆனால், அதன் துக்கம் யார் காதிலும் விழவில்லை.

00

ஒளிப்பட உதவி – dogzer

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.