ம. கிருஷ்ணகுமார்
கொஞ்சந் தான்
எதிரெதிர் தான்
இடைவெளி தான்
ஒரு காலை உள்ளே விட்டு
இப்படியும் அப்படியும் உடலைக் குறுக்கி
வெளி வந்துவிடும் காலஅளவு தான்
காலம் சருகைப் போல் உதிரக் கூடியது
ஒரு கணம்
ஒருசில நினைவுத் துளிகள்
உள்ளிழுக்கும் கடல் அலையில்
புதைந்து விடும் பழைய தடங்கள்