இருட்டு அறைகளில்
கவிந்து கிடக்கிறது அச்சம்.
அநாதரவான தனிமையில்
உயிர்பெறுகிறது
அமானுஷ்யம்.
சிறு ஒலித்துணுக்கில்
பேரமைதி அதிர்கிறது.
நினைவின் அடுக்கில்
பேய்க்கதைகள்
மேலெழுகின்றன.
உள்ளறைகளில்
என்னைத் தவிர
இன்னொன்று நிறைகிறது,
சட்டென வெளிச்சம் மீள்கிறது.
இனி இருளுக்கென
பிறந்துவிட்டது ஓர் உலகம்.