உறங்கி எழும் வீடு – அருணா சுப்ரமணியன் கவிதை

ஒவ்வொரு முறை நான்
வெளியேறும் போதும்
உற்று கவனிக்கிறேன்..
ஒரு நீண்ட கொட்டாவியும்
என்னுடன் வெளியேறுகிறது…
வேறு வேலையெதுவுமில்லை
என்று கதவடைத்து
உறங்க செல்கிறது என் வீடு..

மாலை திரும்புகையில்
யாருமற்ற வீட்டிலும்
அழைப்புமணியை
அழுத்தாமல் நுழைவதில்லை..
போர்வையை உதறி
சோம்பல் முறித்து
ஓடி வந்தென்னை
அணைத்துக் கொள்கிறது
உறங்கி எழும் என் வீடு…

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.