அஞ்சதி
கொடுந்தீயில்
வெந்த அவள் மனத்தை
கொத்தித் தின்கிறது
குடும்பக் கட்டமைப்பு
எதையும் கேட்காமல்
அலுத்துப் போன அவள்
அங்கங்களில் மறந்தே போனது
மனமிருக்கும் இடம்
எல்லோருக்கும் சூரியோதயம்
அவளுக்கோ சந்திரோதயம்
வலிகளைக் கடந்திட
வழக்கமாகிப் போனது
அவள் மேல் உழும் காளைமாடுக்கு
எவ்வித உணர்வுகளும் புரியாது
அக்னி சாட்சியில்
அன்றாடம் கேட்கிறது
அபயக்குரல்
எல்லாவற்றையும் பொறுத்து கொள்கிறாள்
தன் பிள்ளைக்கு வேண்டுமாம் அப்பா
மறுநாள் அக்னி பிரவேசத்தில் குளிக்க
அவள் அங்கங்களை அலசுகிறாள் இல்லற அமிலத்தில்.