Author: பதாகை

எஸ்தரும் காவேரியும்

-ஷாந்தேரி மல்லையா-  

இரு பெண்கள். நிம்மதியற்ற இணை வாழ்வுகள். நெகிழ்வற்ற சமூக அமைப்புக்கு எதிராய்க் குமுறிப் போராடி உடையும் உயிர்கள். எஸ்தரும் காவேரியும்.

சில்வியா ப்ளாத்தின் பெருமையை எனக்கு உணர்த்திய நண்பருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவரது துயர வாழ்வையும் முடிவையும் வாசித்தபோதுதான் ப்ளாத்தின் பெயரையே முதன்முறை கேள்விப்படுகிறேன். எழுத்தாளர் டெட் ஹ்யூஸுடன் அமைதியில்லாத மணவாழ்வு. ப்ளாத்தை அறியும் பயணம் இறுதியில் அவரது கிளாசிக் படைப்பான பெல் ஜாருக்கு என்னை இட்டுச் சென்றது (The Bell Jar). மேதைமையின் என்னவொரு அற்புதப் படைப்பு. அமைதியற்ற தன் உள்ளத்தின் இருண்ட பகுதிகளிலிருந்து அவர் எஸ்தர் கிரீன்வுட்டை உருவாக்கினார். எஸ்தரைப் பற்றி படிப்பதற்கு முன்பே எனக்கு அவளைத் தெரியும் என்ற உணர்வு ஏன் தொடர்ந்து இருந்து வந்தது? இந்த அனுபவம் எனக்கு முன்னரே ஏற்பட்டிருக்கிறது, இந்தப் பக்கங்களை நான் முன்னரே வாசித்திருக்கிறேன் என்ற ஆழ்ந்த உணர்வு ஏன் ஏற்பட்டது? பின்னர்தான் காவேரியின் சாயல்களைக் கொண்டவள் எஸ்தர் என்ற உண்மை புலப்பட்டது. (more…)

ஸ்டிக்கர் பொட்டு

சத்யராஜ்குமார்

photo

வித்யா ரங்கா மாமாவிடம் ஆசையாய் உட்கார்ந்து பேசுகிறாள் என்று முரளிக்குத் தோன்றியது. அவரும் வித்யா மேல் அநாவசியமாய்க் கரிசனம் காட்டுகிறார். இவர் ஏன் அமெரிக்கா வந்தார் என்று முரளிக்கு எரிச்சலாக இருந்தது.

அவன் ஆஃபிசிலிருந்து திரும்பியபோது சமையலறையை ஒட்டிய டெக்கிலிருந்து பெரும் சிரிப்புச் சத்தம் கேட்டது.

வித்யா காற்றில் சைன் வேவ் போலப் பரவி அசையும் கூந்தலை நளினமாய் ஒதுக்கி கொஞ்சம் வெட்கம் கலந்த குரலில் சிரித்துக் கொண்டிருந்தாள். ரங்கா மாமா அப்படி என்ன ஜோக் அடித்தாரோ.

அவர் இங்கே இருக்கப் போவதே மொத்தம் நான்கு நாட்கள்தான்.

யாரிடமும் உடனே வளவளவென்று பேச ஆரம்பித்து விடுவார். பி.ஹெச்.இ.எல்லில் ஜியெம்மாக இருந்து ரிட்டயராகிய கையோடு சும்மா இருக்காமல் உதிரி பாகங்கள் ஏற்றுமதி செய்யும் கம்பெனி ஆரம்பித்து – இப்போது பிசினஸ் காரியமாய் அமெரிக்கா வந்திருக்கிறார்.

டெக்ஸாஸில் அவர் நண்பரின் வீட்டில் பத்து நாள் தங்கி ஆயில் கம்பெனி வேலைகள். அவை முடிந்த கையோடு பழைய சொந்தம் விட்டு விடக் கூடாது என்று ஈஸ்ட் கோஸ்ட்டில் இருக்கும் முரளி வீட்டுக்கும் விசிட். (more…)

ப்ரான்க் மக்கோர்ட்டின் (Frank McCourt) நினைவுக்குறிப்பு நூல்கள்

– அஜய் ஆர். –

ப்ரான்க் மக்கோர்ட்டின் (Frank McCourt) நினைவுக்குறிப்பு நூல்களின் ட்ரிலாஜியில் இரண்டாம் நூலான ‘Tisஇன் இறுதியில், ப்ரான்க்கின் தாய் ‘ஆஞ்செலா’ (Angela) இயற்கை எய்தியபின் , அவரை அடக்கம் செய்துவிட்டு ப்ரான்க்கும் அவர் சகோதரர்களும்

“A mother’s love is a blessing
No matter where you roam.
Keep her while you have her,
You’ll miss her when she’s gone

என்ற பாடலை பாடுகிறார்கள். நூல் இப்படி முடிகிறது:

“We had lunch at a pub along the road to Ballinacurra and you’d never know from the way we ate and drank and laughed that we’d scattered our mother who was once a grand dancer at the Wembley Hall and known to one and all for the way she sang a good song, oh, if she could only catch her breath”

‘grand dancer ‘, ‘sang a good song’ போன்ற வார்த்தைகள் இள வயது ஆஞ்செலா குறித்து நம்முள் எழுப்பும் பிம்பத்திற்கும், திருமணத்திற்குப் பின்னாலான அவர் வாழ்வு குறித்து நாம் இந்த நினைவுக்குறிப்புகளில் இருந்து தெரிந்து கொள்வதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம். நாம் அறிந்த ஆஞ்செலா எத்தகையவர்? (more…)

கலையாத மௌனம்

அதிகாரநந்தி

அந்தப் புறம் நான்
இந்தப் புறம் இவர்கள்
இடையே வளர்ந்து கொண்டே போகும் இந்த மெளனம்
சத்தியமான புன்னகை
பரிசு
அக்கறை கொண்ட கோபம்
இன்னும் எத்தனையோ காரியங்கள்
ஒவ்வொன்றுக்கும் பெயர் தேடுவது வீண்
மெளனம் மட்டும் உடைவதாயில்லை.

ஒளிப்பட உதவி – senso comune

கவியின் கண் 17 – சாவின் நூற்பு நார்கள்

– எஸ். சுரேஷ் –

சிறிய சதுக்கம்

என் வாழ்க்கை ஒரு சிறு சதுக்கத்தின் வடிவம் பெற்றுவிட்டது
உன் மரணத்துக்கான ஏற்பாடுகள் கவனமாகச் செய்யப்படும் அந்த இலையுதிர்காலம்
நீ நேசித்ததால் நான் அந்தச் சதுக்கத்தைப் பற்றிக் கொண்டிருந்தேன்
சிறிய கடைகளின் அலங்காரமற்ற, பழைய நினைவுகளில் ஆழ்த்தும் மானுடம்
ரிப்பன்களையும் துணிகளையும் மடித்துப் பிரிக்கும் அதன் கடைக்காரர்கள்
நான் நீயாக நினைத்தேன், நீ சாகப் போகிறாய் என்பதால்
அங்கிருந்த என் வாழ்வெல்லாம் எனக்குரியதல்லாது போகும் என்பதால்
நீ சிரிப்பது போல் நான் சிரிக்க முயற்சித்தேன்
செய்தித்தாள் விற்பவனிடமும் சிகரெட் விற்பவனிடமும்
வயலெட்கள் விற்றுக் கொண்டிருக்கும் அந்தக் கால்களற்ற பெண்ணிடமும்
காலற்றவளிடம் உனக்காகப் பிரார்த்திக்கச் சொன்னேன்
அந்தச் சதுக்கத்தின் மூலையில் இருக்கும் சர்ச்சுகளின்
பீடங்கள் அனைத்திலும் மெழுகுவர்த்திகள் ஏற்றினேன்
என் கண்களைத் திறந்ததும் கண்டேன், வாசித்தேன்
உன் முகத்தில் நித்தியத்தின் சேவகம் எழுதப்பட்டிருப்பதை
தெருக்களை அழைத்தேன், இடங்களை, மனிதர்களை,
உன் முகத்தின் சாட்சிகளாக இருந்தவர்கள் அனைவரையும்
உன்னை அழைப்பார்கள் என்று, உன்னை அவிழ்ப்பார்கள் என்று
உன்னைச் சுற்றி சாவு நூற்றுக் கொண்டிருந்த நார்களையும் என்று

சோபியா டி மெல்லோ பிரெய்னர் அன்ட்ரீசன்
போர்ச்சுகீசிய மொழி கவிதையின் ஆங்கில மொழியாக்கம் , ரூத் ஃபெய்ன்லைட் (1994) (more…)