எஸ். சுரேஷ்

கோ வாடிஸ்

  எஸ். சுரேஷ் –

 

“எங்க போற?”

“வெளியில போறப்போ கேக்காதேன்னு
எவ்வளவு தரம் சொல்றது”
“நீ கிளம்பறப்ப தானே கேக்க முடியும்?”
“வாயை மூடிண்டு இருடா சனியனே”
மௌனம்
“எங்க போற?”
“வெளியில போறப்போ கேக்காதேன்னு
எவ்வளவு தரம் சொல்றது”
“நீ கிளம்பறப்ப தானே கேக்க முடியும்?”
“வாயை மூடிண்டு இருடா சனியனே”
மீண்டும் மௌனம்
“எங்க போற?”

“வெளியில போறப்போ கேக்காதேன்னு
எவ்வளவு தரம் சொல்றது”
“நீ கிளம்பறப்ப தானே கேக்க முடியும்?”
“வாயை மூடிண்டு இருடா சனியனே”
“மியாவ். மியாவ்.
மி யாஆஆஆஆ வ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்”
பேசிக்கொண்டே இருந்த கூண்டுக்கிளியை பார்த்து
பூனை கத்தியது
“கீச் கீச் கீச் கீச்” என்றுவிட்டு மௌனமானது கிளி
சற்றுநேரம் கழித்து சோம்பல் முறித்துவிட்டு
வாசலைத் தாண்டியது பூனை
“எங்க போற?”

பத்து புத்தகங்கள் – எஸ் சுரேஷ் பட்டியல்

 
 
அண்மையில் பல நண்பர்கள் குறிப்பிடத்தக்க பத்து புத்தகங்கள் என்று ஒரு பட்டியலை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டனர். நண்பர் ஸ்ரீதர் நாராயணன் எனக்கும் அழைப்பு விடுத்திருந்ததால் நானும் பட்டியலிட்டேன்.  “போரும் அமைதியும்”, “குற்றமும் தண்டனையும்” போன்ற இலக்கிய உச்சங்களைத் தொட்ட நாவல்களைதான் அதில் பேச வேண்டியிருந்தது. இது போன்ற பட்டியல்களில் ஒரு சிக்கல், நாம் சொல்லும் எல்லா புத்தகங்களும் எல்லாருக்கும் சுவையாக இருக்காது என்பதுதான். என்னா ஆனாலும், எல்லாரும் “போரும் அமைதியும்”, அல்லது, “யூலிஸ்சஸ்” நாவலை எடுத்துப் படித்து முடிக்கப் போவதில்லை. பட்டியலில் உள்ள பல புத்தகங்களின் பெயர்களைப் பார்த்ததுமே இலக்கியப் படைப்புகள் என்றால் கனமாக இருக்கும், போர் அடிக்கும், பொறுமை இருந்தால்தான் படிக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது. இலக்கியம் வாசிப்பதில் நாட்டம் இருப்பவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் சுவாரசியமாக இருக்கலாம், ஆனால் மற்ற அனைவருக்கும் இதை எல்லாம் படித்து முடிப்பது ஒரு கடமை போலதான் இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே, நான் இந்தப் பட்டியலைத் தொகுக்கும்போது இது விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டேன் – இவை இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படும் படைப்புகள், அதே சமயம் புதுமையானவை, சுவாரசியமானவை. என் ரசனையும் உங்கள் ரசனையும் வேறுபடலாம், எனக்கு நன்றாக இருப்பது உங்களுக்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அளப்பரிய பொறுமைக்கான அவசியம் இல்லாமல், கொஞ்சம் பொறுமையாகவும் ஓரளவு ஆர்வமாகவும் இவற்றை நீங்கள் வாசிக்க நேர்ந்தால், நிச்சயம் இந்தப் புத்தகங்களைப் பாராட்டுவீர்கள்.
 
என்ற சிறு முன்னுரையோடு, என் பரிந்துரைப் பட்டியலை அளிக்கிறேன்:

(more…)

சூப்பர் சிங்கர்

  எஸ். சுரேஷ் –

பாட்டியிடமிருந்து திருடிவந்த வடையை
வாயில் வைத்துக் கொண்டிருந்த காக்காவைப் பார்த்து
நரி கூறியது,
“நீ நன்றாய் பாடுவாயாமே. ஒரு பாட்டு பாடு கேட்கலாம்”

வடையைக் காலுக்கடியில் பத்திரமாக வைத்துவிட்டு
“போடா போடா புண்ணாக்கு, போடாத தப்புக்கணக்கு”
என்று காக்கா பாடி முடித்தப்பின் நரி,
“குரல் நன்றாக இருக்கிறது,
ஆனால் இன்னும் கொஞ்சம் எமோஷன் வேணும்,
வாய்ஸ்ல கூடுதலா டைனமிக்ஸ் வேணும்,
ரெகுலரா ப்ராக்டிஸ் பண்ணு”,
என்று கூறிவிட்டு
திராட்ஷை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

கவியின் கண் – “மரணத்தைப் பற்றி, மிகையின்றி”

 எஸ். சுரேஷ் –

மரணத்தைப் பற்றி, மிகையின்றி

நகைச்சுவை புரியாது,
நட்சத்திரத்தைக் கண்டெடுக்கத் தெரியாது,
பாலம் கட்ட முடியாது.
வலை பின்னவோ, சுரங்கம் வெட்டவோ,
வயல் உழவோ, கப்பல் கட்டவோ,
கேக் ஒன்றை பேக் செய்யவோ தெரியாது.

நாளைக்கான நம் திட்டத்தில்
அது முடிவாய்ச் சொல்வதே சட்டம்,
ஆனால் இதைப் பேசி ஒரு பயனுமில்லை

தன் வேலை நிமித்தமாய்
ஒரு காரியத்தையும் செய்து கொள்ளத் தெரியாது:
இடுகுழி வெட்டவோ,
கல்லறைப் பெட்டி செய்யவோ,
தனக்கப்புறம் துடைத்துக் கொடுக்கவோ,
அதனால் முடியாது.

கொலைத்தொழில் ஒன்றே நினைப்பாய் இருந்தாலும்
தன் வேலையை உருப்படியாய்ச் செய்வதில்லை,
நாம் ஒவ்வொருத்தரும்தான் அதன் முதல் பலி போல்
ஒரு ஒழுங்குமுறை கிடையாது, ஒரு திறமை இல்லை

அதற்கும் வெற்றிகள் உண்டே,
ஆனால் அதன் எண்ணற்ற தோல்விகளைப் பாருங்கள்,
குறி தவறிய அடிகள்
திரும்பத் திரும்ப எத்தனை முயற்சிகள்! (more…)

குரு வணக்கம்

 எஸ். சுரேஷ் –

ஒரு கையில் கல்லும் மறு கையில் மைக்குமாய்
சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தவனை நோக்கி,
அந்த பக்கம் வந்த குள்ள நரி,
“வணக்கம் வாத்யாரே. நல்லா கீரியா?
ஆசிரியர் தின வாழ்த்துகள். வர்ட்டா?”
என்று கேட்டுச் சென்றது.
“பாருடா, ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் எல்லாம்
என்னை இன்னாமா ஞாபகம் வச்சிக்கினுகுறாங்கோ”
என்று கண்கள் கலங்க, நாத்தழுதழுக்க கூறினான்
அந்தப் பேச்சாளன்.