– எஸ். சுரேஷ் –
“எங்க போற?”
– எஸ். சுரேஷ் –
“எங்க போற?”
– எஸ். சுரேஷ் –
பாட்டியிடமிருந்து திருடிவந்த வடையை
வாயில் வைத்துக் கொண்டிருந்த காக்காவைப் பார்த்து
நரி கூறியது,
“நீ நன்றாய் பாடுவாயாமே. ஒரு பாட்டு பாடு கேட்கலாம்”
வடையைக் காலுக்கடியில் பத்திரமாக வைத்துவிட்டு
“போடா போடா புண்ணாக்கு, போடாத தப்புக்கணக்கு”
என்று காக்கா பாடி முடித்தப்பின் நரி,
“குரல் நன்றாக இருக்கிறது,
ஆனால் இன்னும் கொஞ்சம் எமோஷன் வேணும்,
வாய்ஸ்ல கூடுதலா டைனமிக்ஸ் வேணும்,
ரெகுலரா ப்ராக்டிஸ் பண்ணு”,
என்று கூறிவிட்டு
திராட்ஷை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.
– எஸ். சுரேஷ் –
மரணத்தைப் பற்றி, மிகையின்றி
நகைச்சுவை புரியாது,
நட்சத்திரத்தைக் கண்டெடுக்கத் தெரியாது,
பாலம் கட்ட முடியாது.
வலை பின்னவோ, சுரங்கம் வெட்டவோ,
வயல் உழவோ, கப்பல் கட்டவோ,
கேக் ஒன்றை பேக் செய்யவோ தெரியாது.
நாளைக்கான நம் திட்டத்தில்
அது முடிவாய்ச் சொல்வதே சட்டம்,
ஆனால் இதைப் பேசி ஒரு பயனுமில்லை
தன் வேலை நிமித்தமாய்
ஒரு காரியத்தையும் செய்து கொள்ளத் தெரியாது:
இடுகுழி வெட்டவோ,
கல்லறைப் பெட்டி செய்யவோ,
தனக்கப்புறம் துடைத்துக் கொடுக்கவோ,
அதனால் முடியாது.
கொலைத்தொழில் ஒன்றே நினைப்பாய் இருந்தாலும்
தன் வேலையை உருப்படியாய்ச் செய்வதில்லை,
நாம் ஒவ்வொருத்தரும்தான் அதன் முதல் பலி போல்
ஒரு ஒழுங்குமுறை கிடையாது, ஒரு திறமை இல்லை
அதற்கும் வெற்றிகள் உண்டே,
ஆனால் அதன் எண்ணற்ற தோல்விகளைப் பாருங்கள்,
குறி தவறிய அடிகள்
திரும்பத் திரும்ப எத்தனை முயற்சிகள்! (more…)
– எஸ். சுரேஷ் –
ஒரு கையில் கல்லும் மறு கையில் மைக்குமாய்
சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தவனை நோக்கி,
அந்த பக்கம் வந்த குள்ள நரி,
“வணக்கம் வாத்யாரே. நல்லா கீரியா?
ஆசிரியர் தின வாழ்த்துகள். வர்ட்டா?”
என்று கேட்டுச் சென்றது.
“பாருடா, ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் எல்லாம்
என்னை இன்னாமா ஞாபகம் வச்சிக்கினுகுறாங்கோ”
என்று கண்கள் கலங்க, நாத்தழுதழுக்க கூறினான்
அந்தப் பேச்சாளன்.