– எஸ். சுரேஷ் –
பாட்டியிடமிருந்து திருடிவந்த வடையை
வாயில் வைத்துக் கொண்டிருந்த காக்காவைப் பார்த்து
நரி கூறியது,
“நீ நன்றாய் பாடுவாயாமே. ஒரு பாட்டு பாடு கேட்கலாம்”
வடையைக் காலுக்கடியில் பத்திரமாக வைத்துவிட்டு
“போடா போடா புண்ணாக்கு, போடாத தப்புக்கணக்கு”
என்று காக்கா பாடி முடித்தப்பின் நரி,
“குரல் நன்றாக இருக்கிறது,
ஆனால் இன்னும் கொஞ்சம் எமோஷன் வேணும்,
வாய்ஸ்ல கூடுதலா டைனமிக்ஸ் வேணும்,
ரெகுலரா ப்ராக்டிஸ் பண்ணு”,
என்று கூறிவிட்டு
திராட்ஷை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.