பீட்டர் பொங்கல்

ஆற்றோரமாய்…

மெரடித் ஏலிங்

“அந்த ஆள் என்ன செய்து கொண்டிருக்கிறான்?”

“எந்த ஆள்?”

மலை மேல் பார்க்கத் திரும்பினான் மைக்கேல்.

“நாம் செய்வதைத்தான் செய்வானாக இருக்கும்,” என்றான் அவன்.

கேரி வெயிலுக்குப் போட்டுக் கொண்டிருந்த தொப்பியைக் கழட்டினாள்.

“அவனிடம் மீன் பிடிக்கும் கருவிகள் எதுவும் இல்லை,” என்றாள் அவள். “அல்லது காம்ப் செய்வதற்கானதுவும் இல்லை”

“காரில் வைத்திருப்பானாக இருக்கும்”

மைக்கேல் கல்லோன்றின் மீது கால் வைத்து, ஆற்றுக்குள் தூண்டிலை வீசினான்.

“எனக்கு என்னமோ சந்தேகமாக இருக்கிறது,” என்றாள் கேரி. “பார்த்தால் அப்படி இல்லை”.

மைக்கேல் தூண்டிலை இழுத்துக் கட்டிவிட்டு, ஆற்றங்கரைக்கு ஏறி வந்தான்.

“இருக்கட்டும்,” என்றான் அவன், “அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாய்?” (more…)

ரிச்சர்ட் ரோர்ட்டி – ஒரு குறுஞ்சித்திரம்

(பிலாசபர்ஸ் மாகசின் என்ற இதழில் சைமன் ஈஸம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் )

ரிச்சர்ட் ரோர்ட்டி – சிலருக்கு தத்துவவியல் நாயகன், பிறருக்கு தத்துவத்தின் எதிரி. ரோர்ட்டியைக் கண்டனம் செய்வது தத்துவத்துறையில் ஒரு விளையாட்டு போல் ஆகிவிட்டது என்று ரிச்சர்ட் பெர்ன்ஸ்டீன் குறிப்பிடுகிறார். விரும்பலாம் வெறுக்கலாம், இவரை அலட்சியப்படுத்த முடியாது. உலகில் மிக அதிக தாக்கத்தையும் விவாதங்களையும் ஏற்படுத்திய, அதிக அளவில் எழுதிய, அதிக அளவில் வாசிக்கப்படும் தத்துவவியலாளர்களில் ஒருவர் ரோர்ட்டி என்பதில் சந்தேகமில்லை. சமகாலத்தவர்கள் பலரைப் போலன்றி, தன் ஆதர்சங்களான வில்லியம் ஜேம்ஸ் மற்றும் ஜான் ட்யூவியின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, சமூக நீதி மற்றும் மக்களாட்சி குறித்து பரவலான வாசகர்களை நோக்கி பல்வகைப்பட்ட தலைப்புகளில் பொதுத்தளத்தில் விரிவாக எழுதும் தத்துவவியலாளர் இவர்.

Philosophy and the Mirror of Nature (1979) மற்றும் Consequences of Pragmatism (1982) ஆகிய இரு துவக்க கால பிரதிகளைக் கொண்டு ரோர்ட்டி கடை விரித்தார். அவர் நடைமுறை நோக்கை முன்னிருத்துபவர் (pragmatist). அதாவது, தான் யதார்த்தத்தை ‘இயற்கையின் கண்ணாடி’ போல் பிரதிபலிப்பதாக மொழி கோரிக் கொள்வதில் முழு உண்மை இருக்க முடியாது என்று அவர் நம்புகிறார். மாறாக, அறிவானது, ‘மெய்’ உலகை வெற்றிகரமாய்ச் சமாளிப்பதற்கான சாத்தியங்களைத் தருவித்துக் கொடுப்பதாக இருக்கிறது என்று எதிர்பார்ப்பது மட்டுமே மொழியின்பாற் நாம் வைக்கக்கூடிய உச்ச நம்பிக்கையாக இருக்க முடியும். (more…)

உள்ளிருக்கும் அன்னியன்- கிரண் நாகர்கர், இரு நேர்முகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்

அர்னாப் சக்லதார்: இந்த நாவலின் எழுதப்பட நேர்ந்தது குறித்துச் சிறிது பேசலாமா?

கிரண் நாகர்கர்: Cuckold உருவான விதம் குறித்துச் சுருக்கமாகச் சொல்கிறேன்: நான் அவ்வப்போது எழுதுபவனாக இருக்கப் போகிறேன் என்பது எனக்கு அப்போது தெரியாது, ஆனால் என் இளமைப் பருவத்தில் இரண்டு விஷயங்களைத் தொடப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தேன். அவற்றிலொன்று, உட்கலவி (incest)- காரணம், இந்தியச் சமுதாயம் மட்டுமல்ல, மேலைச் சமுதாயமும் தகாத விஷயங்களை (taboo issues) புதிதாய்ப் பார்ப்பதை அனுமதிப்பதில்லை என்று நினைக்கிறேன். ஒரு ஸ்டீரியோடைப்பாகதான் இவற்றை நாம் அணுக முடியும். முடிந்தவரை, தகாத விஷயங்களை ஸ்டீரியோடைப்பாக அணுகுவதைத் தவிர்க்க நினைப்பதால், “முடிந்தவரை” என்று நான் சொல்லியிருப்பதை அடிக்கோடிட விரும்புகிறேன், உட்கலவியைப் பேசுவது எனக்குச் சாத்தியமில்லாமல் போனது. எப்படியானாலும் அது மிகவும் தீவிரமான களம். அது பற்றி எழுதுவதானால் மகேஷ் எல்குஞ்ச்வார் எழுதியதைப் போலல்லாமல் வேறு வகையில் எழுத வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தது.

தொடக்கூடாது என்று நான் நினைத்திருந்த மற்றொரு விஷயம் மீரா…

அர்னாப் சக்லதார் ஏன்? (more…)

சொல்ல வந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லும் கலை – ‘The Sense of Style: The Thinking Person’s Guide to Writing in the 21st Century- Steven Pinker’.

இது நூல் மதிப்பீடோ, நூல் அறிமுகமோ விமரிசனமோ அல்ல. மேற்கண்ட புத்தகத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன என்றாலும் எழுத வந்த விஷயத்தைப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்வது எப்படி என்பது பற்றி சில குறிப்புகளைப் பதிவு செய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

ஸ்டீவன் பிங்கர் எழுதிய, “The Sense of Style: The Thinking Person’s Guide to Writing in the 21st Century” என்ற புத்தகம் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இது பற்றி இணையமெங்கும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். Cognitive Scientist, Linguist என்றெல்லாம் அறியப்படுவதாலும் பொதுவாசகர்கள் படிக்கும் வகையில் அறிவியல் புத்தகங்களை எழுதுவதில் வெற்றி பெற்றவர் என்பதாலும் பிங்கர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. (more…)

நெல் ப்ராய்டன்பெர்கருடன் ஒரு நேர்முகம்

நீங்கள் வெளிநாடு செல்ல நேர்ந்தது எப்படி?

பட்டப்படிப்பு முடிந்ததும் ஓராண்டு பாங்காக்கில் இருந்தேன், அங்கு ஓர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினேன். அதன்பின் இந்தியாவில் இரண்டு மாதங்கள் இருந்தேன், அடுத்த ஆண்டு கோடையில் புதுதில்லி சென்று அங்குள்ள குடிசைப் பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பள்ளியொன்றில் வகுப்புகள் எடுத்தேன்.

அமெரிக்கா குறித்த உங்கள் பார்வையை நீங்கள் வெளிநாட்டில் இருந்த காலம் எப்படி மாற்றிற்று?

அமெரிக்கனாக இருப்பது என்பதைப் பற்றி அர்த்தமுள்ள வகையில் நான் நினைத்துப் பார்த்ததே அப்போதுதான். நம் பூகோளத்திலோ அல்லது அரசியல் தனிமையிலோ ஏதோ ஒன்று அமெரிக்கனாக இருப்பது பற்றி சுவாரசியமாக எதுவும் நினைப்பதை இங்கிருக்கும்வரை தடுப்பதாக இருக்கிறது. தாய்லாந்தில் நாற்பது ஆங்கில ஆசிரியர்கள் இருந்தார்கள் என்று நினைக்கிறேன், அவர்களில் முப்பத்து ஒன்பது பேர் நடுத்தர வயது தாய் பெண்மணிகள். நான் ஏதோ காட்சிப்பொருளாக இருப்பது போல் உணர்ந்தேன், நான் செய்வது ஒவ்வொன்றும் அத்தனை அமெரிக்கர்களும் செய்வதாக இருக்க வேண்டும் என்பது போன்ற எதிர்பார்ப்பை உணர்ந்தேன். இதற்கு என்ன அர்த்தம் என்பது குறித்த பிரக்ஞை எனக்கு இருந்து கொண்டேயிருந்தது. (more…)