பீட்டர் பொங்கல்

குழந்தை வளரவேயில்லை – – லவல் மிக் வைட்

நாங்கள் வீட்டுக்கு வெளியே போர்ச்சில் இருந்தோம், கிராஸ்ஸி ரன்னில் வளர்வது பற்றி பாட்டி பேசிக்கொண்டிருந்தாள். அங்கு வாழ்ந்தவர்கள் அனைவரும் இப்போது இறந்து விட்டார்கள், நான் அவர்கள் யாரையும் அறிந்திருக்கவில்லை  பெயர்களன்றி அவர்கள் எனக்கு வேறெதுவுமில்லை. ஊஞ்சலாடிக் கொண்டே காட்ச்-22 படித்துக் கொண்டிருந்தேன், அது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. படிப்பதை நிறுத்தும் அளவுக்கு பிடிக்கவில்லை என்பதில்லை, அட்டையில் இருந்த ப்ளர்புகள் சொன்ன அளவுக்கு அது அவ்வளவு தமாஷாக இருக்கவில்லை. எனக்கு அது புரியவில்லை. எனக்குப் புரியவில்லை என்பதால் அதிகரிக்கும் அதிருப்தியுடன் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருந்தேன். செத்துப் போனவர்களைப் பற்றி பாட்டி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்- ராம்சேக்கள், ஸ்லீத்கள், ப்ராஸ்ட்கள். எல்லாம் வெறும் பெயர்கள். அப்புறம் அவள் செத்த குழந்தை என்று என்னவோ சொன்னாள். யாருக்கோ செத்த குழந்தை இருந்தது. அது வளரவில்லை. என்ன?

“ஹ?” என்று கேட்டேன்.

“என்ன?” என்று பதிலுக்கு கேட்டாள் பாட்டி.

“குழந்தைப் பற்றிதான்,” என்றேன். “என்ன ஆயிற்று?”

“ஓ,” என்றாள் பாட்டி. “மிசஸ் பிஷர், பெக் பிஷர், அவள் மாட் பிஷரைக் கல்யாணம் செய்து கொள்ளும்வரை பிராஸ்டாக இருந்தாள். அப்புறம் அவளுக்கு இந்தக் குழந்தை பிறந்தது, அது வளரவேயில்லை” (more…)

வெல்ஸ் டவருடன் ஒரு உரையாடல் – தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.

 
நன்றி என்பிஆர் – 
 
உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்பு, இதற்கு கிடைத்திருக்கும் இப்படிப்பட்ட வரவேற்பு. இது எப்படியிருக்கிறது?
 
சுவாரசியமான விஷயம்தான். என்னால் இதை நினைத்தே பார்க்க முடியவில்லை. பொதுவாக, அமெரிக்காவில் சிறுகதை தொகுப்புகளுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பற்றி நான் அறிந்து கொண்ட அளவில், உண்மையில் என் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அது எவராலும் கவனிக்கப்படாது, விமரிசகர்களால் கடுமையாகக் கண்டனம் செய்யப்படாமல் மறைந்தால் நல்லது என்பதாகதான் இருந்தது. அவர்கள் இதை விரும்புகிறார்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. என்னை ஊக்குவிப்பதாக இருக்கிறது. பிரமாதமாக இருக்கிறது.

(more…)

பிறிதொரு ஆடவன் – டிசைரி யூங்

 

என் தங்கை வீட்டுக்காரன் சட்டையில்லாமல் வீட்டைச் சுற்றித் திரிவதை விரும்புகிறான். மார்ஷியாவைத் திருமணம் செய்து கொண்ட நாள் முதலே அவனுக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது.

நான் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குப் போய் நிற்பதில்லை. என் மகனைப் போலவே என் மருமகனும் ஒரு குழந்தைதான், அவனுக்கு எட்டு மாதங்கள்தான் ஆகின்றன, போன மாதம்தான் தவழ ஆரம்பித்தான்.

“தொழில் எப்படி போகிறது, சில்வியோ?” என்று என்னைக் கேட்கிறான். அவன் மஞ்சள் நிற கிண்ணம் ஒன்றில் ஓட்ஸ், வாழைப்பழம், தயிர் கலந்து கொண்டிருக்கிறான். குழந்தையின் கிண்ணம் போலிருக்கிறது.

“நன்றாகப் போகிறது. ஆனால் என் அப்பாவுடன் வேலை செய்வது கொஞ்சம் கஷ்டம்தான். அவர் மிக அதிகம் எதிர்பார்க்கிறார், அவருக்கு எதையும் கனகச்சிதமாகச் செய்தாக வேண்டும். சில சமயம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போய்விடலாம் பொலிருக்கிறது,” என்று ஒப்புக்கொள்கிறேன். (more…)

ஏழ்மை அனைத்தையும் மின்னச் செய்கிறது – பிராங்க் மக்கோர்ட் நேர்முகம்.

“ஒரு சாதாரண வாழ்கையை வாழ்ந்த சாதாரணர் இவர் என்று தோன்றுகிறது இல்லையா?” என்று பிராங்க் மக்கோர்ட் பற்றி கேட்கிறார் அஜய், “60 வயது வரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்த மக்கோர்ட் தன் நூல்களின் வெற்றியால் பிரபலமாகிவிட்டார். வாழ்க்கை அனுபவங்களா, அவற்றைச் சொல்லும் முறையா அல்லது அவற்றை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமா, எது ஒருவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது அல்லது அவர்களுடன் ஒன்ற வைக்கிறது?” .  அவரது கட்டுரையைப் படிக்கும்போது மக்கோர்ட்டின் பால்யகால ஏழ்மையும் அவரது தாயின் போராட்டங்களும்தான் முக்கியமாகத் தெரிகின்றன. சமூக, பொருளாதார சீர்கேடுகளால் பாதிக்கப்படும் அம்மாக்களும் பிள்ளைகளும் உலகெங்கும் ஒன்று போலவே இருக்கின்றனர்.

பிராங்க் மக்கோர்ட் Academy of Achievement என்ற தளத்தில் அளித்த நேர்முகத்தில் அவர் தன் இளம் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட பகுதிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழாக்கம் இது:

உங்கள் குழந்தைப்பருவம் எப்படிப்பட்டதாக இருந்தது?

ஒரு வகையில் செறிவானதாக இருந்தது. நாங்கள் மிகக் கடுமையான ஏழ்மை நிலையில் இருந்தோம். பொருளாதார தளத்தில் மிகத் தாழ்ந்த நிலைக்கும் கீழிருந்தாலும், நாங்கள் எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருந்தோம். எதிர்பார்ப்பதற்கு நிறைய இருந்தது, நம்பிக்கை வைப்பதற்கு நிறைய இருந்தது, அடைவதற்கு நிறைய இருந்தது, கனவுகாண நிறைய இருந்தது என்ற பொருளில் எங்கள் குழந்தைப்பருவம் மிகச் செறிவாக இருந்தது, ஆனால் பொருளாதாரச் சூழல் மிக மோசமாக இருந்தது. மழைக்கால கல்கத்தா என்று சொல்லலாம். கல்கத்தாவிலாவது வெம்மை இருக்கிறது. (more…)

“நான் எழுத்தைக் கொண்டு யோசிக்கிறேன்”- ரிச்சர்ட் ரூஸோ – சில நேர்முகங்கள்

பீட்டர் பொங்கல்

ரிச்சர்ட் ரூஸோவின் அண்மைய நூல், “Elsewhere” என்ற தன்வரலாற்று படைப்பு. இது குறித்து, “கடந்த பல ஆண்டுகளில் மிகவும் நேர்மையான, நெகிழ்ச்சியான அமெரிக்க நினைவு நூல்களில் இது ஒன்று”, என்று குறிப்பிடுகிறார் மிகேல் ஷ்வாப் http://www.npr.org/2012/11/16/163952390/elsewhere-has-beauty-but-no-happy-ending.

டெய்லி பீஸ்ட் தளத்தில் ஜேன் சியாபட்டாரியுடனான நேர்காணலின்  இந்த நூலில் வரும் விஷயங்களைப் பேசுகிறார் ரிச்சர்ட் ரூஸோ. அவற்றின் சில பகுதிகள் இங்கு:

நீங்கள் எல்ஸ்வேர் எழுதக் காரணமாக இருந்தது எது?

கிராண்டாவில் பதிப்பாசிரியராக இருக்கும் ஜான் ஃப்ரீமன் மிக முக்கியமான ஒரு காரணமாக இருந்திருக்கிறார். வீடு திரும்புதல் பற்றிய ஒரு இதழ் தொகுக்கும் திட்டத்திலிருந்தார் அவர். நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவர் க்ளோவர்ஸ்வில் செல்லும் வழிகாட்டிக் குறியைப் பார்த்திருக்கிறார். மெய்யுலகில் உள்ள அந்த இடத்தைப் பற்றி நான் எழுதினாலும் எழுதக்கூடும் என்ற எண்ணத்தில் அவர் என்னைத் தொடர்பு கொண்டார். இதுவரை பல்லாண்டுகளாக நான் அதன் புனைவு அவதாரங்களைதான் பயான்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேன்.

அந்த சமயத்தில் நான் அதை ஒப்புக்கொள்ளக்கூடிய மனநிலையில் இருந்தேன். என் அம்மா அப்போதுதான் இறந்திருந்தார். அம்மாவின் வாழ்வும் சாவும், க்ளோவர்ஸ்விலுடன் எங்களுக்கு இருந்த ஆழ்ந்த உறவு, எனக்கும் என் அம்மாவுக்கும் பொதுவானவையாக எவ்வளவு விஷயங்கள் இருந்தன என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஜான் என்னை அழைத்தார். எங்கள் பிறப்பு (நாங்கள் இருவருமே அப்சஸிவ்வான ஆட்கள், என் அம்மா அளவுக்கு நானுமே மனசில் ஒன்று தோன்றிவிட்டால் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பவனாக இருக்கிறேன்), எங்கள் வளர்ப்பு (நாங்கள் இருவருமே காலம் தொடாத சிற்றூர் ஒன்றில் வளர்ந்தவர்கள்). அந்த சமயம் பார்த்து ஜான் என்னை அழைத்திருக்காவிட்டால், நான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்க மாட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு அவ்வளவு அதிகம் ஏற்பட்டதில்லை. இந்தப் புத்தகம் இப்படிப்பட்ட உணர்வுகள் அத்தனையையும் தணித்திருக்க வேண்டும். (more…)