பீட்டர் பொங்கல்

மோசமான ரசனையின் பிறப்பு – பாரி ஷ்வாப்ஸ்கி

The Nation என்ற தளத்தில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரையின் சற்றே தளர்ந்த தமிழாக்க வடிவம் 

Henri Matisse குறித்து ஒரு சம்பவம் சொல்லப்படுவதுண்டு. மாட்டிஸ் வரைந்த உருச்சித்திரங்கள் (portraits) ஒன்றில் உள்ள ஒரு பெண்ணின் கை மிக நீளமாக இருக்கிறது என்று அவரைச் சந்தித்தவர் ஒருவர் குறை கூறினாராம். “மேடம், நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்,” என்று பதில் சொல்லியிருக்கிறார் மாட்டிஸ். “இது பெண்ணல்ல, ஓவியம்”. மாட்டிஸ் இப்படிச் சொன்னதற்கு அவள் இது போன்ற ஒரு பதில் சொல்லியிருக்கலாம், “இது வாதமல்ல, பிடிவாதம்”. ஓவியரின் இந்தக் கேலிப் பேச்சைக் குறித்து ஈ.ஹெச். கோம்ப்ரிச் (E.H. Gombrich) இவ்வாறு எழுதுகிறார்: “நெடுங்காலமாக இவர்களைச் சகித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களோடு நவீன ஓவியர்களும் விமரிசகர்களும் விளையாடிப் பார்க்கும் முரணுரைகளில் (paradox) இதுவும் ஒன்று” (கோம்ப்ரிச்சின் மிகச் சிறந்த ஆய்வு நூலான ஆர்ட் அண்ட் இல்யூஷனில்தான் மேற்கண்ட சம்பவம் பற்றிய குறிப்பு இருக்கிறது).

இது போன்ற முரணுரைகளைத் தவிர்ப்பது மிகக் கடினம். ஓவியங்களைக் கொண்டு உருச்சமைத்தல் (pictorial illusionism), அதாவது, “நம்பும்படி காட்சியளிக்கத் தவறிய பிம்பங்கள் குறித்து மேற்கத்திய நாகரிகம் குறிப்பிட்ட சில காலகட்டங்களில் அடைந்த அதிருப்தியின் தூண்டுதலால்” உண்மை போல் தோற்றமளிக்கும் ஓவியங்களின் ஐரோப்பிய ஆதர்ச தொகுப்பு ஒன்று (European canon of realistic representation) உருவானது என்று கோம்ப்ரிச் கருதினார். அவரது கூற்றே முரணுரைத்தன்மை கொண்டதாக இருக்கிறது. காரணம், ஒரு பிம்பத்தை நம்ப விழைந்தவர்கள் எவர் என்ற கேள்வியை இது தவிர்க்கிறது. மாட்டிஸ் வருவதற்கு வெகு காலம் முன்னரே, மானரிஸ்ட்டுகள் (Mannerists) என்று அறியப்பட்ட பதினாறாம் நூற்றாண்டு இத்தாலிய ஓவியர்கள் தங்கள் ஓவியங்களிலுள்ள உருவங்களைப் பிறழச் செய்து பிழை பரிமாணங்களில் வரையத் தயாராய் இருந்தனர். அவர்கள் இப்படிச் செய்தது, நம்பத்தகுந்த பிம்பங்களைத் தோற்றுவிப்பதற்கல்ல, மாறாய், நம்பத்தகுந்த ஓவியங்களைப் படைக்கும் நோக்கத்தில் இதைச் செய்தனர். (more…)

மொழியாக்கம்- மொழிகளைக் கடந்த வாசிப்பின் சாத்தியம்

akrphoto7_courtesy-ramanujan-estate_1

பொதுவாக நாம் மொழிபெயர்ப்பு கவிதைகள் சொல்லுக்கு சொல் மொழிபெயர்க்கப்பட வேண்டும், அல்லது, அவற்றின் அடிப்படை உணர்வுகளை வெளிப்படுத்தினால் போதும் என்பது போல் நினைக்கிறோம். எனவே ஒரு மொழிபெயர்ப்பை அணுகும்போது அது மூல மொழியிலிருந்து வேறுபடுவதில் ஏதோ ஒரு தவறு நிகழ்ந்து விட்டதுபோல் பார்க்கிறோம் – நமக்கே நன்றாகத் தெரியும், இப்படிப்பட்ட பிழைபெயர்ப்புகளை ஓரளவுக்கு மேல் தவிர்க்க முடியாது என்று. இந்நிலையில், இந்த இழப்புகளிலிருந்து வேறு ஏதோ ஒன்றை மீட்பதற்கான வழியை நாம் காண இயலுமா என்ற கேள்வியை எழுப்புவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்று நினைக்கிறேன். (more…)

டோல்கீனின் பேவொஃல்ப்: மான்ஸ்டர்களை வீழ்த்துதல்

 
 
டோல்கீன் தன் ‘பேவோல்ஃப்’ மொழிபெயர்ப்பைத் தனியாய் எடுத்து வைத்திருக்கலாம், ஆனால் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப்பின் அவர் இது குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். அந்தக் கவிதை குறித்த மிகச் சிறந்த கட்டுரை என்று மட்டுமல்ல, பலர், இது ஆங்கில இலக்கியத்தின் மிக அருமையான கட்டுரைகளில் ஒன்று என்றும் கருதுகின்றனர். இதுதான் அந்தக் கட்டுரை “பேவொல்ஃப்: மான்ஸ்டர்களும் விமரிசகர்களும்”. விமரிசகர்களுக்கு மான்ஸ்டர்கள் மேல் என்று நினைத்தார் டோல்கீன். கவிதையின் பொருள் புறக்கணிக்கப்பட்டு, தொல்பொருள் மற்றும் மொழியியல் ஆய்வுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது என்பது அவரது கருத்தாக இருந்தது. பேவொல்ஃப்பில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது, எந்த அளவுக்கு கற்பனை உள்ளது? அண்மையில் கண்டெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகளுக்கு அதனுடன் உள்ள உறவு என்ன?

(more…)

முகத்தின் மறுபக்கம்

wagstrom-thomas
Karl Ove Knausgaard எழுதிய முகத்தின் மறுபக்கம் என்ற நீண்ட கட்டுரையின் தமிழாக்கப்பட்ட சிறு பகுதி: முழு கட்டுரையையும் இங்கே வாசிக்கலாம்

பின்னங்கழுத்தை நினைத்துப் பார்க்கும்போது முதலில் மனதில் தோன்றுபவை கில்லட்டின்கள், சிரச்சேதங்கள், மரணதண்டனைகள். இது சிறிது வினோதமாகவே இருக்கிறது – ஏனெனில் நாம் வாழும் தேசத்தில் மரண தண்டனைகள் விதிக்கப்படுவதில்லை – இங்கு கில்லட்டின்கள் இல்லை, எனவே நம் பண்பாட்டில் சிரச்சேதம் முழுமையாகவே ஒரு விளிம்புநிலை நிகழ்வாக இருக்கிறது. என்றாலும்கூட, பின்னங்கழுத்து என் நினைவுக்கு வரும்போது, வெட்டி வீசு என்று நினைத்துக் கொள்கிறேன். (more…)

புதிய உலகம் படைக்க அறிவியல் புனைவுகள் உதவுமா?

The Ascender என்ற தளத்தில் டாமியன் வால்டர் எழுதியுள்ள Rebuilding the World என்ற கட்டுரையின் மொழிபெயர்க்கப்பட்ட பகுதிகள்:

இரு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இங்கிலாந்தில் உள்ள கல்லூரி நகரான ஆக்ஸ்ஃபோர்டில், கற்பனையை மீட்டெடுக்கும் கதைகளைப் படைக்கும் நோக்கத்தில் சில எழுத்தாளர்கள் The Inklings என்ற குழுவாய் கூடினார்கள். அவர்களில் சி.எஸ். லூயிஸ் ஒருவர், அவரது நார்னியா நாவல்கள் ஒரு தலைமுறை குழந்தைகளை வசீகரிப்பதாக இருக்கும். ஜே.ஆர்.ஆர். டோல்கின் மற்றொருவர், இவரது மிடில் எர்த் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கதையாக இருக்கும், இதைச் சிலர் ஏற்க மறுக்கலாம். தொழில் புரட்சி உலகில் ஏற்படுத்திய பெரும் மாற்றத்தைத் தன் குழந்தைப் பருவத்தில் கண்ணுற்றவர் டோல்கின். ,மனித வரலாற்றில் முதன்முறையாக உலகெங்கும் வெடித்த பெரும் யுத்தத்தின் கொடூரங்களைத் தன் இளம் பருவத்தில் எதிர்கொண்டு உயிர்பிழைத்தவர் அவர். இந்த இரட்டை அனுபவங்களைக் கொண்டு அவர் நவீன உலகுக்கான புதிய தொன்மம் என்று தான் கருதிய ஒரு கதையை உருவாக்குவார். (more…)