– வெ. கணேஷ்–
வியாபார விஷயமாக வெளிநாட்டு பயணம் செய்யும்போதெல்லாம் எப்படியாவது நேரத்தை மிச்சப்படுத்தி சுற்றுலா சிறப்பிடங்களையோ விசேஷமான கோயில்களையோ பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். அப்படியான சமயங்களில் எவ்வேலைக்காக நாம் வந்தோமோ அதில் இருக்க வேண்டிய ஆர்வத்தின் அளவு குறையும். அதுவும் நமக்கு பிடித்த வரலாற்று தொடர்போ சமயத் தொடர்போ உள்ள இடத்திற்கு வரும் சந்தர்ப்பம் அமைந்தால், “அந்த இடத்திற்கு சென்று பார்க்காமல் வந்தீர்களா?”, என்ற கேள்வி கேட்கப்பட்டுவிடுமோ என்று உதறல் எடுக்க ஆரம்பித்துவிடும். இனிமேல் இந்த ஊருக்கெல்லாம் வரவா போகிறோம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்றி துன்புறுத்தும். வேலையை அரைகுறையாக முடித்துவிட்டு எல்லோரும் புகைப்படம் எடுத்துக்கொள்ள விழையும் இடத்துக்கு வேகவேகமாக சென்று நாமும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு திரும்பினால் அதில் ஒரு திருப்தி.
புதிய ஓர் இடத்துக்குச் சென்று வந்தோம் என்ற திருப்தியல்ல- நாமிருக்கும் புகைப்படத்தை பிறருக்கு காட்டப் போகிறோம் என்ற பெருமிதமே அது. (more…)



