எழுத்து

காய்ந்த சருகு

– எஸ். சுரேஷ் –

““Our world, like a charnel-house, lies strewn with the detritus of dead epochs.” – Le Corbusier, Urbanisme

கிணற்றில் எட்டிப் பார்க்கிறேன்
நீல ஆகாசம்
பளிச்சென்ற சூரியன்
உள்ளிருந்து எட்டி பார்க்கும் என் பிம்பம்

ஏதோ தண்ணீரில் விழுகிறது

வானம், சூரியன், பிம்பம் கலைந்து
ஒன்றாகின்றன மெல்ல மெல்ல

ஆட்டம் தணிந்து பிரிகின்றன

ஒரு காய்ந்த சருகு, மெல்ல
ஆடிக்கொண்டு ஆடிக்கொண்டு
கண்ணை மறைத்து அமர்கிறது

நீல வானம்
தகிக்கும் சூரியன்
பாசி படிந்த பழைய கிணறு
என்னைத் தழுவிச்செல்லும்

சில்லென்ற காற்று
ஒலி எழுப்பும் பறவைகள்

ஆகக்கூடிய இருண்மையின் அதியற்புத அற்ப எழுத்து – லோரி மோரின் ‘பார்க்’: ஜெஃப் டயர் நூல் மதிப்பீடு

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : எத்தனை இலை தழைகள் மற்றும் இதர வஸ்துக்கள் போட்டு கொதிக்க வைத்துச் சாப்பிட்டாலும் கனிபலைஸ் செய்வது சுவைக்காக அல்ல. கொடுஞ்சுவையாக இருக்குமென்றாலும் இதயத்தை எடுத்துத் துண்டம் போட்டுச் சாப்பிடுவது அன்னிய அடையாளத்தை அழித்து ஆற்றல்களை உட்கொள்ளவே. இத்தகைய கனிபலியங்கள் பிற மொழி படைப்புகளின் இதயத்தைக் கொணரும் நோக்கத்தில் செய்யப்படுகின்றன, சுவையின் பொருட்டல்ல.

ஊர்வலத்தில் பெய்யும் மழையாய் இருக்கும் விருப்பம் எனக்கில்லை- அதிலும், நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கும் ஓர் ஊர்வலத்தில், ஒப்பீட்டளவில் அபூர்வமாய் நிகழும் ஊர்வலத்தில். ஆனால் குளிரிலும் மழையிலும் வரிசை கட்டி நின்றிருந்த அனைவரின் சார்பிலும் பேசுவதானால், ஒரு சிறு விஷயத்தைப் பதிவு செய்தாக வேண்டும். சரியாகச் சொல்வதானால் இதை ஒரு குற்றமாகச் சொல்ல முடியாதுதான், இந்த ஊர்வலத்தின் சில பகுதிகள் ஏற்கனவே இந்த வட்டாரங்களைக் கடந்து சென்றிருக்கின்றன என்பதை மட்டும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (more…)

“நாவலில் காலம் ஒரு பாத்திரம்” – லோரி மோர் நேர்முகத்தின் சில பகுதிகள்

Anagrams, Who Will Run the Frog Hospital?, A Gate at the Stairs என்று மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார் லோரி மோர். இவரது சிறுகதைகள் Self Help, Like Life, Birds of America, Bark என்று நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டிருகின்றன. இவை தவிர புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி பற்றி ந்யூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸில் இவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். தற்போது நாஷ்வில்லில் உள்ள வான்டர்பில்ட் யுனிவர்ஸிட்டியில் புனைவெழுத்துக் கலை கற்பிக்கிறார்.

யுவர் ஹிட்டன் செல்ஃப் என்ற தளத்தில் பதிப்பிக்கப்பட்ட நேர்முகத்தின் சில பகுதிகள் இங்கு தமிழாக்கம் செய்து அளிக்கப்படுகின்றன. நேர்முகம் கண்டவர் – டீர்ட்ரி

நீங்கள் இந்தக் கதைகளை எழுதுவதற்கான உந்துதல் என்ன?

எனக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. உண்மையில் இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வந்தன. நபகோவ் கதையைப் பொருத்தவரை, மீண்டும் “Signs and Symbols” வாசித்தேன். ஆசிரியையாக ஒவ்வொரு மறுவருடமும் நான் அதைப் படித்துக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது. இப்போது திடீரென்று நான் அதில் வெவ்வேறு பல விஷயங்களை கவனித்தேன். அதைத் தொடர்ந்து என் மனதில் ஒரு கதை நிழலாடத் துவங்கிற்று. ரே கார்வார் கதைக்கு நாதன் இங்க்லாண்டர் இதைச் செய்தது எனக்கு உந்துதல் அளித்திருக்கலாம். கார்வர் கதைக்கு நெருக்கமான நிழலாக இல்லாத ஒரு கதையை அவர் எழுதினார். நான் எந்தக் கதையைச் சொல்கிறேன் என்று தெரிகிறதா? (more…)

புனைவு வாசிப்பின் இடைவெளிகள் – சில அடிப்படை அணுகல் குறிப்புகள்

பொதுவாக ஒரு கதையோ கவிதையோ படிக்கும்போது அதைப் பற்றி நாம என்ன நினைக்கிறோம் என்பது மூன்று விஷயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன: பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை, புரிகிறது/ புரியவில்லை, இதையெல்லாம் எழுதலாம்/ எழுதக்கூடாது. இது மூன்றையும் முறையே அகவெதிர்வினை, அறிவெதிர்வினை, அறவெதிர்வினை (emotional response, intellectual response, moral response) என்று சொல்லலாம்.

மூவகைப்பட்ட எதிர்வினைகளும் நம் அனைவருக்கும் சாத்தியமாக இருந்தாலும், நம்மில் பெரும்பாலனவர்கள் இவற்றில் ஏதோ ஒரு இடத்தில் நின்றுவிடுகிறோம். எனக்கு ஒரு கதை பிடிக்கவில்லை என்றால் அது குறித்து என்ன சொன்னாலும், அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே போல் எனக்குப் புரியாத கதையைப் பற்றி எத்தனை விளக்கம் கொடுத்தலும் அதை ஏற்றுக் கொள்ள என் மனம் ஒப்பாது. வன்முறை, காமம், சில அரசியல் சார்புகள் எனக்குப் பிடிக்காவிட்டால் அதைப் பற்றி எழுதப்பட்டவை எவ்வளவு அறிவார்ந்து இருந்தாலும், அவற்றில் உணர்வுகள் எவ்வளவு மெய்ம்மையுடன் வெளிப்பட்டிருந்தாலும் என்னால் அவற்றை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள முடியாது. (more…)

உச்சத்தில் ஒரு கதவு: லோரி மோரின் A Gate at the Stairs

– அஜய் ஆர். – 

லோரி மோர் (Lorrie Moore) எழுதிய ‘A Gate at the Stairs’ நாவலின் ஆரம்ப பகுதியில், நாவலின் கதைசொல்லி டாஸி (Tassie), தன் சொந்த ஊருக்குச் செல்கிறார். தன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கும் தன் தம்பி ராபர்ட்டுடனான தன் உறவைப் பற்றி சொல்லும்போது, “in fact when I thought back to our many years together, he was, essentially, always nice to me,.. ” என்று முடிக்கிறார். ‘essentially’ , ‘nice’ என்ற இரு வார்த்தைகள்தான் இந்த வரியில் முக்கியம், பல ஆண்டு உறவின் சாரத்தை இந்த இரு வார்த்தைகளில் தந்து விடுகிறார். ஒருவருக்கொருவர் அதீத அன்போ, வெறுப்போ, போட்டி பொறமையோ (sibling rivalry) கொண்டுள்ளார்கள் என்றெல்லாம் சொல்லாமல், யதார்த்த அக்கா/ தம்பி உறவைச் சுட்டி செல்கிறார். முகத்திலறையும் சொற்விளையாட்டோ, புத்திசாலித்தனமோ இல்லாமல், வாசகனின் கவனத்திற்கு வர முனையாத உரைநடை நாவலின் முக்கிய அம்சம். பேச்சொலியில் வரும் ஏற்ற இறக்கங்கள், உரையாடலின் இடையே வரும் தயக்கங்கள், மௌனங்கள் மூலம் வாசகனுக்கு தெரிவிக்க வேண்டியதை நுட்பமாக சொல்லிச் செல்வது மோரின் பாணி. (more…)