எழுத்து

எமக்குத் தொழில் கவிதை

“எது நல்ல கவிதை என்று கேட்கிறார் கிரி
கோட்பாடு ஒன்றைச் சொல்கிறார் பாஸ்கர்
கோட்பாட்டை மீறியதுதான் கவிதை என்கிறார் ஸ்ரீதர்
நீ என்ன சொல்கிறாய்?”
என்று என் வீட்டு கிளியிடம் கேட்டேன்
 
‘மியாவ்’ 
 
“அதுவும் சரிதான். எங்கே நீ ஒரு கவிதை சொல்”
 
“மியாஆவ்வ்வ், 
மியாவ்வ்வ், 
மியாஆவ்” 

 ரைட்டு விடு.

ஒரு பிரச்சாரக் கவிதை

யாரேனும் சன்னமான குரலில்
கருணைக் கதாகாலேட்சபம் நடத்தினால்
கேட்பதற்கு இதமாகத்தான் இருக்கிறது

அப்பாவிடம் இரைந்து பேசும் போதும்
மாமனார் சுட்ட அப்பளம் கேட்கும் போதும்
அம்மாவிற்கு விஷயங்களைப் புரியவைக்கும் போதும்
சின்னஞ்சிறு குழந்தை அழும் போதும்
இந்தக் கருணையெல்லாம் எங்கே

ஒரு தேரையை விடவும்
நாம் என்ன முன்னேறிவிட்டோம்
என்று நினைக்கிறீர்கள்?

                                                                – அதிகாரநந்தி

அஞ்சலி

-அதிகாரநந்தி-

Obituary_Athigaranandhi

“வணக்கம் சார்”

”சொல்லுய்யா. என்ன விஷயம்? என்னையெல்லாம் ஞாபகம் வெச்சுருக்க போலிருக்கே”

“என்ன சார் இப்படிச் சொல்றீங்க. போன வாட்டி நீங்க அனுப்பினத பதிப்பிக்க முடியாம போச்சு”

“ம்ம்”

“சார் விஷயம் தெரியுமா? நம்ம ராமசாமிய  ஆஸ்பத்ரில அட்மிட் பண்ணியிருக்காங்களாம்”

“என்னவாம்”

“ஹார்ட் அட்டாக் தான் சார். கொஞ்சம் சீரியஸ்னு சொல்லிக்கறாங்க”

“ம்ம்”

“நீங்க அவரப்பத்தி ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தீங்கன்னா…. இந்த வாரமே போட்டுறலாம்”

“ம்ம்”

“இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள…”

”மெயில் பண்றேன்யா…”

இரண்டு மணிநேரம் கழித்து.

”சார்…”

“முடிச்சாச்சு இதோ மெயில் பண்றேன். எதையும் எடிட் பண்ணிடாத”

“சார், அதில்லை. அவர் வெறும் செக்கப்புக்கு தான் போனாராம். இப்போ திரும்ப வீட்டுக்கு போயிட்டார்னு சொல்றாங்க.”

”ம்ம்… நான் அனுப்பறேன் ஃப்யூச்சர்ல யூஸ் பண்ணிக்கோ”

 

தியானம்

யானை தன் தும்பிக்கையை நீட்டியது.
நானும் கை நீட்டினேன்.
இருவரும் கை குலுக்கிக் கொண்டோம்.
 
மற்ற யானைகளைப் பார்த்து கையசைத்தேன்.
அவையும் தலையாட்டின.
 
ஒரு குட்டி யானை ஓடி வந்து என் கை குலுக்கியது.
 
உட்காரச் சொல்லி சமிக்ஞை செய்துவிட்டு நான் உட்கார்ந்தேன்.
எல்லா யானைகளும் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டன.
 
இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்த குட்டி யானை, சட்டென்று நின்றது. 
எல்லோரையும் பார்த்துவிட்டு, மெதுவாக முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டது. 
 
வெகு நேரம் அங்கு பறவைச் சத்தம் மட்டுமே கேட்டது.
 
விடைபெரும்பொழுது எல்லா யானைகளையும் நோக்கி கையசைத்துவிட்டுப் புறப்பட்டேன்
 
குட்டி யானை ஓடி வந்து என் கையை மறுபடியும் குலுக்கிவிட்டு கண்ணை ஒரு கணம் மூடித் திறந்தது.

கவியின்கண் – 6 “இரு பேராண்மை செய்த பூசல்”

– எஸ். சுரேஷ்-

செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே
ஒல்வா ளல்லளென் றவரிகழ்ந் தனரே
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி யாங்கென்
அல்ல னெஞ்ச மலமலக் குறுமே.

ஔவையின் குறுந்தொகை பாடலின் எளிய ஆங்கில வடிவம் இது : (more…)