– ஸ்ரீதர் நாராயணன் –
“இவனுக்குத்தான் அந்தப் பொண்ணிருக்கற வீடு தெரியுமா?”
லட்சுமணனின் குரலைக் கேட்டதும் கருணாகரன் சட்டென படித்துக் கொண்டிருந்த பத்திரிகையை கீழேப் போட்டுவிட்டு ஸ்டூலில் இருந்து எழுந்து நின்றான். கையை விறைப்பாக வைத்துக் கொண்டு, கீழுதட்டை மடித்துக் கொண்டு அவனை எடைபோடுவது போல பார்த்துக் கொண்டிருந்த லட்சுமணனின் தோரணையைப் பார்த்ததும் இன்னும் பணிவாக
“என்ன சார்” என்றான்.
“தனம் வீடு பத்தி கேக்கறார் சார்” என்றவாறே முத்துராமன் அவர் பக்கத்தில் வந்து நின்றார். பொலிவற்ற பின்னணியில் பிரகாசமான நிறங்கள் தூக்கலாக தெரிவது போல, லட்சுமணனின் மிடுக்கு இன்னமும் அதிகமாக தெரிந்தது.
“எந்தூரு உனுக்கு?” என்றார்.
உடல்மொழியில் இன்னமும் குழைவை சேர்த்துக் கொண்டு “இங்கிட்டுத்தான் சார். மருதுபட்டி” என்றான் கருணாகரன்.
“மருதுபட்டியா? அங்கிட்டு பூரா பயகளும் மாடு பத்திட்டு போற காட்டுப் பயகதான. நீ இங்க துணிய கிழிச்சுப் போட வன்ட்டியாக்கும்”
“இல்லீங்க சார். காலேஜு முடிச்சிட்டு சும்மாங்காட்டிக்கு வேலைக்கு வந்தேன்.”
அவன் சொல்வதை கவனிக்காமல் கடையை சுற்றுமுற்றும் அளவெடுத்துக் கொண்டிருந்தார் லட்சுமணன். முக்கியமாக துணிகளை உதறி, மடித்து பாலித்தீன் பைகளில் போட்டுக்கொண்டிருந்த பெண்களை ஒவ்வொருவராக அளவெடுப்பது போல பார்த்துக் கொண்டிருந்தார். கருணாகரன் பேசுவதை நிறுத்திவிட்டது தெரிந்ததும் அவன் பக்கம் திரும்பி
‘இந்தப் பொண்ணு வீடு எங்கிருக்கு?’ (more…)