ஆடன்

ஆடனின் ரகசிய வாழ்க்கை – எட்வார்ட் மென்டல்ஸன்

நான் எதிர்பாராமல் அறிய வந்த விஷயம் இது. நானோ வேறு பிறரோ அறிந்திருப்பதைவிட மிக அதிக அளவில் இது போன்ற நிகழ்வுகள் இருந்திருக்கலாம்.

விருந்தொன்றில் ஒரு முறை நான் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். 1950களில் ஆடன் ந்யூ யார்க்கில் வழிபட்டு வந்த செயின்ட் மார்க்ஸ் இன் த பவரி எபிஸ்கோப்பல் தேவாலயத்தில் வழிபாடுகள் செய்துவந்த பெண் அவர். அதன் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்தவர்களில் ஒரு மூதாட்டி கடுமையான அச்சம் காரணமாக உறக்கம் வராமல் அவதிப்படுவதாக ஆடனுக்குத் தெரிய வந்தது என்றார் அந்தப் பெண். எனவே ஆடன் ஒரு கம்பளியை எடுத்துச் சென்று, அவரது அபார்ட்மெண்ட் கதவுக்கு வெளியே இருந்த ஹால்வேயில் உறங்குவதைப் பழக்கப்படுத்திக் கொண்டார். அந்த மூதாட்டியின் அச்சம் நீங்கும்வரை ஆடன் அங்குதான் உறங்கினார். (more…)