அர்னாப் சக்லதார்: இந்த நாவலின் எழுதப்பட நேர்ந்தது குறித்துச் சிறிது பேசலாமா?
கிரண் நாகர்கர்: Cuckold உருவான விதம் குறித்துச் சுருக்கமாகச் சொல்கிறேன்: நான் அவ்வப்போது எழுதுபவனாக இருக்கப் போகிறேன் என்பது எனக்கு அப்போது தெரியாது, ஆனால் என் இளமைப் பருவத்தில் இரண்டு விஷயங்களைத் தொடப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தேன். அவற்றிலொன்று, உட்கலவி (incest)- காரணம், இந்தியச் சமுதாயம் மட்டுமல்ல, மேலைச் சமுதாயமும் தகாத விஷயங்களை (taboo issues) புதிதாய்ப் பார்ப்பதை அனுமதிப்பதில்லை என்று நினைக்கிறேன். ஒரு ஸ்டீரியோடைப்பாகதான் இவற்றை நாம் அணுக முடியும். முடிந்தவரை, தகாத விஷயங்களை ஸ்டீரியோடைப்பாக அணுகுவதைத் தவிர்க்க நினைப்பதால், “முடிந்தவரை” என்று நான் சொல்லியிருப்பதை அடிக்கோடிட விரும்புகிறேன், உட்கலவியைப் பேசுவது எனக்குச் சாத்தியமில்லாமல் போனது. எப்படியானாலும் அது மிகவும் தீவிரமான களம். அது பற்றி எழுதுவதானால் மகேஷ் எல்குஞ்ச்வார் எழுதியதைப் போலல்லாமல் வேறு வகையில் எழுத வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தது.
தொடக்கூடாது என்று நான் நினைத்திருந்த மற்றொரு விஷயம் மீரா…
அர்னாப் சக்லதார் ஏன்? (more…)
