
…சிறிது தேடலுக்குப்பின் இறுதியில் நான் லிண்டா லூ இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தேன். அவள் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தாள். நான் கண்டுபிடித்ததை எல்லாம் பரபரப்பாக அவளிடம் சொல்லிவிட்டு என் கையில் இருந்த காகிதங்களையும் மின் அஞ்சல் பரிமாற்றங்களின் அச்சு ஆவணங்களையும் அவளிடம் காட்டினேன்.
அவை அனைத்தையும் பொறுமையாக படித்துப்பார்த்த லிண்டா, சிறிது நேரம் மௌனமான, ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தாள். அதன்பின், “என் குழப்பங்கள் சிலவற்றுக்கு இவை விளக்கம் அளிக்கின்றன,” என்றாள் அவள்.
“உனக்கு குழப்பமாக இருந்த விஷயங்கள் எவை? இப்போது என்ன புரிந்தது?|
“புரிந்து விட்டது என்று சொல்ல முடியாது, ஆனா மெல்ல மெல்ல கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கிறது,” என்று சிரித்தாள் லிண்டா.
“என்ன நடந்திருக்கும் என்று நீ நினைக்கிறாய்? இதில் சில விஷயங்கள் எனக்குப் புரிகின்றன, ஆனால் செவ்வாய் பயணம் இங்கு எங்கு வந்தது?”
“இதை ஒவ்வொரு அடியாக யோசிப்போம். முதலில் பூமி என்ற கோள். அங்குதான் நம் மூதாதையர் வசித்திருந்தனர். இங்கிருந்து இரவில் நாம் பூமியைப் பார்க்க முடியும்…” (more…)


