நித்யகன்னி

நித்ய கன்னி – ஆங்கில மொழிபெயர்ப்பாளர் எஸ் சுரேஷ் குறிப்பு

(கருத்து சுதந்திரம் அனைத்து திசைகளிலிருந்தும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நித்யகன்னி நாவலை தான் எழுத நேர்ந்தது குறித்து எம் வி வெங்கட்ராம் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்-

“பெறற்கரிய பேறு பெற்றாள் மாதவி என்னும் பெண்.

“மகவு ஈன்றதும் இழந்த கன்னித்தன்மையைத் திரும்பப் பெறும் பேறுதான் அது. அதன் பயனாக மூன்று அரசர்களையும் ஒரு முனிவரையும் மணந்து, நான்கு குழந்தைகளைப் பெற்று, பெற்ற இடத்திலேயே அவைகளை விடுத்து- கன்னியாகவே தந்தையிடம் திரும்புகிறாள் அவள். அவளுக்கு சுயம்வரம் வைக்க விழைந்த தந்தையின் விருப்பத்தை மறுத்து நித்யகன்னி காட்டுக்குத் தவம் செய்யக் கிளம்பினாள் என்று பாரதம் கூறுகிறது.

“நான் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்; மனித இனத்துக்குப் பெரும் பேறாக இருக்க வேண்டிய அணுசக்தி அசுரசக்தியாக உலகை வதைக்கும் கொடுமையைக் கண்டவன்! வரபலத்தால் இன்பமாக வாழவேண்டிய மாதவி, கானகத்துக்குத் தவம் இயற்றப் போகும் அளவு விரக்தி கொண்டதைக் கண்டு அவள்பால் பரிவு கொண்டேன். இந்தப் பரிவைச் சுற்றித்தான் கதையை வளர்த்தேன்”

(more…)