பீட்டர் பொங்கல்

கவிதையைத் திருத்தி எழுதுதல் – எலியட்டும் பவுண்டும் – ஹ்யூ கென்னர்

(எலியட், பவுண்ட் மற்றும் பாழ்நிலம் கவிதையின் முக்கியத்துவம் குறித்து எம். டி. முத்துக்குமாரசாமி மிகச் சிறப்பான ஆவணப் பதிவொன்றைச் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த கவிதையும்கூட பிறருடன் கலந்தாலோசித்து, முழுமையாகத் திருத்தி எழுதப்பட்ட ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நோக்கத்தில் ஹ்யூ கென்னர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்படுகிறது.)

எலியட்டை விட வயதில் மூத்த பவுண்ட் எலியட்டை விட எராளமாக எழுதிக் குவித்த பவுண்ட், எலியட்டையே கவி என்று கொண்டாடினார். நவீன காப்பியமான யுலிசஸ் எழுதிய ஜாய்ஸ், தத்துவ அறிஞரும் கடவுள் மறுப்பாளருமான ரஸ்ஸல், எலியட்டையே கவி என்றறிந்திருந்தனர். எதனால்? எலியட்டின் கவிதையிலே வாசகனின் அகத்தோடு ஆத்மார்த்தமாய் பேசக்கூடிய குரல் இருந்தது. முதலாம் உலகப்போருக்குப் பின் எழுதுகிற எலியட்டின் கவிதையில் பேசுகிற குரல் ஐரோப்பிய சமூக ஆன்மாவின் குரல். பாழ் நிலத்தில் அந்தக்குரல் தெள்ளத்தெளிவாய் Four quartets ஐ விட அணுக்கமாக வாசகனிடத்தே பேசுகிறது. அந்தக் குரல் உடைந்து போயிருக்கிறது; அவநம்பிக்கையுடனிருக்கிறது. கடவுள் கைவிட்டுவிட்ட குரல் அது. அல்லது கடவுளை கை விட்டு விட்டதால் பாதுகாப்பற்று அமைதியின்மையில் அலைவுறும் குரல். எதையாவது பற்றிக்கொள்ள முடியாதா என்று பரிதவித்து இலக்கிய பிரதிகளெங்கும் அலைந்து உகந்த வரிகளைத் தேடி அவைகளை கோர்த்து கோர்த்து சில சமயம் உரையாடலாய் சில சமயம் பிதற்றலாய் சில சமயம் தெருச்சொல்லாய் பிருகதாரண்ய உபநிடத்திலிருந்து சில வரிகளையும் சேர்த்துக்கொண்டு ஹிரானிமோ மீண்டும் பைத்தியமாகிவிட்டான் ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஒரு collage ஆக அமைகிறது. போருக்குப் பிந்ததைய சமூகத்தின் தீவிர நெருக்கடி ஒவ்வொரு பிரஜையின் மனத்திலிருக்க அந்த மனத்தின் குரலாகவே எலியட்டின் கவித்துவ குரல் பாழ் நிலத்தில் அந்தரங்க சுத்தியுடன் பேசுகிறது. எலியட்டின் ஆத்மார்த்தமாகப் பேசும் கவித்துவ குரலை பவுண்டின் மேதமையே உடனடியாக அடையாளம் காணுகிறது.

“ஆத்மார்த்தமாக பேசும் கவிக்குரல்கள்: பாரதியும் டி.எஸ்.எலியட்டும்”, எம். டி. முத்துக்குமாரசாமி

(more…)

வழித்தடங்கள்

(ஆடன் மொழிபெயர்த்த நூலின் சில மேற்கோள்கள்)

oOo

மிக நீண்ட பயணம்
உள்நோக்கிப் பயணித்தல்.
தன் விதியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன்
தன் தேடலைத் நோக்கிப் பயணிப்பவன்,
தன் இருப்பின் ஆதாரத்தைத் தேடிச் செல்கிறான்.

oOo

ஒரு புள்ளியில் எல்லாமே எளிதாகிவிடும்; இதுவா அதுவா என்ற கேள்விகளெல்லாம் அப்போது இருக்காது. ஏனென்றால், திரும்பிப் பார்த்தால் நீ பணயம் வைத்தவை உனக்கு இல்லாது போகும். வாழ்வின் திரும்ப முடியாத புள்ளி.

oOo

நம் விதியின் சட்டகத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள நமக்கு உரிமையில்லை. ஆனால், அதனுள் நாம் இடுவதெல்லாம் நமதே.

oOo

உன் ஆசைகளை கவனிக்கச் சொல்லி நீ மன்றாடுவது கடவுளிடம் என்பதற்காக, மனித மிருகமான உன் தாபங்கள் பிரார்த்தனை ஆகாது.

oOo

நமக்கென்று உள்ள தெய்வத்தின்பால் நாம் நம்பிக்கை இழந்த அன்றே மரிப்பதில்லை கடவுள். ஆனால் அனைத்து நியாயங்களுக்கும் அப்பால் உள்ள அதிசயம், நிலையான அந்த ஆதாரப் பிரகாசம், அது ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்வைப் புதுப்பித்துக் கொண்டிருக்கவில்லை என்றால், அந்த நாளே நாம் செத்தோம்.

oOo

மரணத்தைத் தேடிப் போகாதே. மரணம் எப்படியும் உன்னைக் கண்டடையும். ஆனால், வரப்போகும் மரணம் நிறைவாக இருக்குமாறு உன் பாதையை நீ தேடிக் கொள்.

oOo

கண்ணியமாக இறப்போமானால் குறைந்தபட்சம் கண்ணியமாவது பிழைத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்.

oOo

வாழ்வையும் மனிதர்களையும்
இறைவன் நேசிப்பது போல் நேசிக்க வேண்டும் –
அவர்களது எண்ணற்ற சாத்தியங்களுக்காக,
அவனைப் போல் காத்திருக்க வேண்டும்,
அவனைப் போல் நீதி வழங்க வேண்டும் –
எந்தத் தீர்ப்பும் எழுதாமல்,
கட்டளை கிடைத்ததும் கீழ்ப்படியவும்
கணப்போதும் திரும்பிப் பாராது செல்லவும்.

oOo

ஒரு தேனீயைப் போல், அமிழ்திலிருந்து விஷத்தைப் பிரித்தெடுத்துக் கொள்கிறோம், நம்மைக் காத்துக் கொள்ள – தன் கொடுக்கைப் பயன்படுத்தும்போது அந்தத் தேனீ என்னவாகும் என்பதும் நமக்கு நன்றாகத் தெரியும்.

oOo oOo

தமிழாக்கம் :  பீட்டர் பொங்கல்

தொடர்புடைய பதிவு : ஆடனின் ரகசிய வாழ்க்கை

உண்மைகள், ஆனால் வெட்கங்கெட்ட பொய்கள்

பீட்டர் பொங்கல் –

Kurt Vonnegut எழுதிய Cat’s Cradle, 1960களின் அமெரிக்க எதிர்கலாசாரத்தைக் கட்டமைத்த மிக முக்கியமான பிரதிகளுள் ஒன்று. இதில் வரும் பொகொனிய சமயம், பெறும் வாதையிலும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றைப் பொய்களால் பெற்று, மனிதன் தன் வாழ்வுக்கு ஒரு பொருள் கொள்ள இயலும் என்று எண்ண வைக்கும் வோனகட்டிய தரிசனம்.

பொகொனிய முதல் நூலும், அதன் அந்திமக் கிரியையான சேற்றுப்பாடலும் பதாகை வாசகர்களுக்காக இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

முதல் நூல்

நான் சொல்லப்போகும் உண்மைகள் அனைத்தும் வெட்கங்கெட்ட பொய்கள்.

முதலில் கடவுள் மண்ணைப் படைத்தார். பிறகு, அதைத் தன் அண்டத்தனிமையில் கண்டார்.

“சேற்றைக் கொண்டு உயிரினங்ளை உருவாக்குவோம், இந்தச் சேறு நாம் என்ன செய்திருக்கிறோம் என்று பார்க்கட்டும்” என்றார் கடவுள். அசைவன அனைத்தையும் படைத்தார், அவற்றிலொன்று மனிதன். மனிதனான  சேறு மட்டுமே பேச முடிந்த உயிரினம். (more…)