ரிச்சர்ட் ரூஸோ

“நான் எழுத்தைக் கொண்டு யோசிக்கிறேன்”- ரிச்சர்ட் ரூஸோ – சில நேர்முகங்கள்

பீட்டர் பொங்கல்

ரிச்சர்ட் ரூஸோவின் அண்மைய நூல், “Elsewhere” என்ற தன்வரலாற்று படைப்பு. இது குறித்து, “கடந்த பல ஆண்டுகளில் மிகவும் நேர்மையான, நெகிழ்ச்சியான அமெரிக்க நினைவு நூல்களில் இது ஒன்று”, என்று குறிப்பிடுகிறார் மிகேல் ஷ்வாப் http://www.npr.org/2012/11/16/163952390/elsewhere-has-beauty-but-no-happy-ending.

டெய்லி பீஸ்ட் தளத்தில் ஜேன் சியாபட்டாரியுடனான நேர்காணலின்  இந்த நூலில் வரும் விஷயங்களைப் பேசுகிறார் ரிச்சர்ட் ரூஸோ. அவற்றின் சில பகுதிகள் இங்கு:

நீங்கள் எல்ஸ்வேர் எழுதக் காரணமாக இருந்தது எது?

கிராண்டாவில் பதிப்பாசிரியராக இருக்கும் ஜான் ஃப்ரீமன் மிக முக்கியமான ஒரு காரணமாக இருந்திருக்கிறார். வீடு திரும்புதல் பற்றிய ஒரு இதழ் தொகுக்கும் திட்டத்திலிருந்தார் அவர். நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவர் க்ளோவர்ஸ்வில் செல்லும் வழிகாட்டிக் குறியைப் பார்த்திருக்கிறார். மெய்யுலகில் உள்ள அந்த இடத்தைப் பற்றி நான் எழுதினாலும் எழுதக்கூடும் என்ற எண்ணத்தில் அவர் என்னைத் தொடர்பு கொண்டார். இதுவரை பல்லாண்டுகளாக நான் அதன் புனைவு அவதாரங்களைதான் பயான்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேன்.

அந்த சமயத்தில் நான் அதை ஒப்புக்கொள்ளக்கூடிய மனநிலையில் இருந்தேன். என் அம்மா அப்போதுதான் இறந்திருந்தார். அம்மாவின் வாழ்வும் சாவும், க்ளோவர்ஸ்விலுடன் எங்களுக்கு இருந்த ஆழ்ந்த உறவு, எனக்கும் என் அம்மாவுக்கும் பொதுவானவையாக எவ்வளவு விஷயங்கள் இருந்தன என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஜான் என்னை அழைத்தார். எங்கள் பிறப்பு (நாங்கள் இருவருமே அப்சஸிவ்வான ஆட்கள், என் அம்மா அளவுக்கு நானுமே மனசில் ஒன்று தோன்றிவிட்டால் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பவனாக இருக்கிறேன்), எங்கள் வளர்ப்பு (நாங்கள் இருவருமே காலம் தொடாத சிற்றூர் ஒன்றில் வளர்ந்தவர்கள்). அந்த சமயம் பார்த்து ஜான் என்னை அழைத்திருக்காவிட்டால், நான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்க மாட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு அவ்வளவு அதிகம் ஏற்பட்டதில்லை. இந்தப் புத்தகம் இப்படிப்பட்ட உணர்வுகள் அத்தனையையும் தணித்திருக்க வேண்டும். (more…)