– மெரடித் ஏலிங் –
“அந்த ஆள் என்ன செய்து கொண்டிருக்கிறான்?”
“எந்த ஆள்?”
மலை மேல் பார்க்கத் திரும்பினான் மைக்கேல்.
“நாம் செய்வதைத்தான் செய்வானாக இருக்கும்,” என்றான் அவன்.
கேரி வெயிலுக்குப் போட்டுக் கொண்டிருந்த தொப்பியைக் கழட்டினாள்.
“அவனிடம் மீன் பிடிக்கும் கருவிகள் எதுவும் இல்லை,” என்றாள் அவள். “அல்லது காம்ப் செய்வதற்கானதுவும் இல்லை”
“காரில் வைத்திருப்பானாக இருக்கும்”
மைக்கேல் கல்லோன்றின் மீது கால் வைத்து, ஆற்றுக்குள் தூண்டிலை வீசினான்.
“எனக்கு என்னமோ சந்தேகமாக இருக்கிறது,” என்றாள் கேரி. “பார்த்தால் அப்படி இல்லை”.
மைக்கேல் தூண்டிலை இழுத்துக் கட்டிவிட்டு, ஆற்றங்கரைக்கு ஏறி வந்தான்.
“இருக்கட்டும்,” என்றான் அவன், “அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாய்?” (more…)