கிணற்றுப் பிரசங்கி

அந்தக் கிணற்றில் ஒரு தவளை இருக்கிறது

இலக்கியம் என்கிறது இசை என்கிறது
ரசனை என்கிறது கலை என்கிறது
அரசியல்கூடப் பேசுகிறது
லோகக்ஷேமத்தைப் பற்றிக்கூடச் சிந்தித்திருக்கிறது
வறுமையை ஓடஓட விரட்டுவேன் என்கிறது

எந்தப் பிரச்சனை குறித்தும் பேசும் தவ
வலிமையை அடைந்து விட்டிருக்கிறது
முந்தாநாள் நடந்த பிரசங்கத்தில்கூட
கிணற்றுள்ள தவளைகளெல்லாம் ஆச்சரியப்பட்டுப் போயின
எவ்வனொரு சிந்தனைச் செறிவென்று கொண்டாடின.

 

– அதிகாரநந்தி

 

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.