கையில் தேநீர் கோப்பையுடன்
நான் பால்கனியில் நின்று
பார்க்கும் பொழுது
கீழே
பாம்பை போல் நெளியும் பாதையையும்
புகை கக்கி செல்லும் வாகனங்களையும்
மரங்களும் மலர்களும்
மறைக்கின்றன
சற்று நேரத்தில்
என்னையும் தன்னுள்
இழுத்துக் கொள்ளும்
இந்த நகரம்
சட்டென்று திரும்பி
ஒலிக்காத கைபேசியை
உற்று பார்க்கிறேன்
என்னுள் இருக்கிறது
நகரம்