மனிதரின் அன்புக்கு பாத்திரமாக
இருக்க ஆசைப்படாதீர்கள்
அவர்கள் எத்தனை மோசமான
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
என்று குத்திக்காட்டுங்கள்
அவர்களுடைய உழைப்பைத்
திருடிக் கொள்ளுங்கள்
முடியுமானால்
அவர்தம் கரங்களை முறித்துவிடுங்கள்
வருடங்கள் கடந்து சந்திக்கும் போது
உங்கள் அல்ப அதிர்ஷ்டங்களையும்
அவர்களின் புதைக்கப்பட்ட ஆசைகளையும்
நினைவுபடுத்துங்கள்
காலம் வழக்கம் போல்
நம்மிடம் வேறுபாடு காட்டாது
போகட்டும்
நம் நண்பர்கள் தங்கள் பெயர்த்திகளுக்குச்
சொல்லும் கதைகளில் ராக்ஷதர்களாய்
எஞ்ஞான்றும் வாழ்வோம்!
Image credit : Mememto Mori, Catholic Eye Candy
