எதுகையும் மோனையும் கச்சிதமாய் அமர
தங்குதடையின்றி வார்த்தைகள் பிரள
அகத்தின் ஆழத்தை வாக்கியங்கள் தொட
மனிதனுக்கு புதுவழி காட்ட
ஒரு கவிதை என்னுள் தோன்றியது
மனதில் இருந்த கவிதை மறைவதற்கு முன்
கணினியில் பதித்துவிட விரைந்தேன்
என் லெனோவோ திங்க்பாட் மேல் தூங்கிக்கொண்டிருந்த
பூனை எழுந்து என்னைப் பார்த்து முறைத்தது
பூனைக்கு பால் எடுக்க நான் சமையலறை சென்றேன்
image credit – Literary Cats