கிலுகிலுப்பை

– ஸ்ரீதர் நாராயணன் –

rattle

 

‘நான் சோகமாக இருக்கிறேன்’
என்று
தளிர்கரத்தால் மோவாயைத் தாங்கிக்கொண்டு
திரும்பி உட்கார்ந்து கொள்கிறாள்.

புதியதொரு வண்ணத்தில் பூத்த
பூவைப் பார்த்தது போல
காண்பவரிடம் எல்லாம்
அந்த சோக முகத்தைப் பற்றி
சொல்லி சொல்லி
சிரிக்கிறோம்.

நச்சரிப்பு, குறும்பு,
கருணை, புத்திசாலித்தனம்,
திமிர், தெய்வீகம்,
அழிச்சாட்டியம்,
என்று அவளுடைய
கிலுகிலுப்பையிலிருந்துதான்
எத்தனை குதூகலங்கள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.