சைதன்யா

காஸ்மிக் தூசி –

image

போதும் நிறுத்து
என்றான் ஒரு கல்லிடம்
சைதன்யா, கல்லின் மொழியில்

ஒரு சாதாரண
பாறையாக இருப்பதில்
என்னதான் பிரச்சினை

உனக்கு
சற்றும் பொருந்தவில்லை
இந்த நிறம்
முகத்திலிருக்கும்
சிவப்பு சாயத்தை
துடைத்தெறி முதலில்

எப்படியானும்
செவ்வந்திப்பூக்களை சூட்டுவேன்
உனக்கு. அவற்றை
உனக்கு பிடிக்குமல்லவா
எனக்கும்தான்.

***

(அருண் கொலாட்கர் எழுதிய Chaitanya என்ற கவிதையின் தமிழாக்கம்)

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.