இவ்வருடத்திற்கான சிறுகதைப் போட்டியை நண்பர்களின் ஒத்துழைப்பும், அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களான நடுவர்கள் திரு பாவண்ணன் மற்றும் திரு க மோகனரங்கன் அவர்களின் தனித்துவமிக்க மதிப்பீடுகளும் சிறப்பித்திருக்கின்றன.
வெற்றி பெற்றச் சிலரைத் தவிர பங்கேற்ற பிறர் அனைவருக்கும் ஏமாற்றம் ஏற்படுவதை இது போன்ற போட்டிகளில் தவிர்க்க முடியாது. ஆனால் வெற்றி தோல்விகள் தனி நபர் படைப்பூக்கத்தின் விசையையோ அது வெளிப்படும் திசையையோ தீர்மானிப்பதாக இருக்க முடியாது. முடிவுகளுக்கு அப்பால் என்னவென்று யோசித்தால், புனைவு எழுதும் ஊக்கமும் புனைவிலக்கியம் குறித்த விமரிசனமும் இன்று மிகவும் அவசியப்படுகிறது. வெற்றி தோல்விகள் அல்ல, தொடர்ந்த இலக்கியச் செயல்பாடே அர்த்தமுள்ளதாக இருக்கும்.
போட்டிக்கு வந்த சிறுகதைகளை தங்களுக்கேயுரிய அளவீடுகளால் சீர்தூக்கிப் பார்த்து தங்கள் தேர்வை அறிவித்த நடுவர்களான திரு பாவண்ணன் அவர்களுக்கும், திரு க மோகனரங்கன் அவர்களுக்கும் பதாகை தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. பரிசுக்குரிய சிறுகதைகளை எழுதியவர்களுக்கு வாழ்த்துகள்.
பரிசுப்பெற்ற கதைகளின் விவரம் பின்வருமாறு.
முதல் பரிசு (தலா ரூ3000/- பரிசு)
- மாசாவின் கரங்கள் – தனா
- யுகசந்தி – முகம்மது ஐஷ்வர்யன்
(வரும் 4-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)
இரண்டாம் பரிசு (தலா ரூ1500/- பரிசு)
- விடுப்பு – கிஷோர் ஸ்ரீராம்
- இரண்டு தோசைகள் – ராஜா (எ) இளமுருகு
(வரும் 11-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)
மூன்றாம் பரிசு (தலா ரூ750/-)
- வண்ணத்துப்பூச்சிகளின் கோவில் – ஆ. ஜீவானந்தம்
- தாலாட்டு – ரபீக் ராஜா
(18-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)
வெற்றிப் பெற்ற படைப்பாளிகளுக்கு பதாகையின் வாழ்த்துகள்.
நன்றி!!!!