நிலையத்து நாய் – அருண் கொலாட்கர்

காஸ்மிக் தூசி

photo
இவ்விடத்தின் ஆவி
உயிர்கொண்டு வாழ்கிறது
நிலையத்து நாயின்
சொறிபிடித்த உடலுக்குள்.

முந்நூறு ஆண்டு
பிரார்த்தனையின் சுயவதை
வருகை புறப்பாட்டு
மரத்தின் கீழ்.

மனிதனா
அல்லது கடவுளின் அவதாரமா
என்பதை மட்டும் கண்டு அறியும் அளவுக்கு
வலது விழியை மட்டும்
திறந்துபார்க்கிறது நாய்

இல்லையேல்
குணப்படுத்தி சொர்க்கத்துக்கு
அழைத்துச்செல்லும் வகையில்

எட்டுக்கை கொண்ட
ரயில்வேயின் காலஅட்டவணை
தலையில் வந்து அடிக்கிறது.

அந்த நாள் இன்னும்
வரவில்லையென
தீர்மானிக்கிறது நாய்.

000

அருண் கொலாட்கர் எழுதிய, The Station Dog, என்ற கவிதையின் தமிழாக்கம்

ஒளிப்பட உதவி – http://www.maciejdakowicz.com/

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.