“எவ்வித இழிவில் நாமிருக்க நேரலாம், நாளையோ பிறகோ?” – சரவணன் அபி

காலமருள் குறித்து சரவணன் அபி-

அன்றாட வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளில் மகிழ்வதும் வருந்துவதும் வழமையாகிப் போன ஒரு நாளில் ஒரு நிலைகுலைவின் பின்புலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது தோன்றியது, இயற்கையின் எந்தவொரு நிகழ்வும் மற்றொன்றின் மேல் ஒரு நீடித்த பாதிப்பை ஏற்படுத்துவதில்லை; புலரியும், அந்தியும் போலவே புயலும், வெள்ளமும் கடந்து போகின்றன.

அது போலவே ரசனையில் திளைக்கும் சில வேளைகளில் தோன்றும்- எவ்வித இழிவில் நாமிருக்க நேரலாம், நாளையோ பிறகோ? அப்போது மனதின் சமநிலை எப்படியிருக்கும்? இந்தத் தருணத்து ரசனையை இழிவின் கணத்தில் நினைவு கூர முடியுமா?

முடியக்கூடும் சமநிலை வாய்த்து விடும்போது, வாழ்வின் சமன்பாடு பிடிபட்டுவிடும் எனத் தோன்றியது.

இந்த எண்ணம் தோன்றிய பிறகு, அனைத்திலும் ஒரு மேன்மையை காண முடியும் எனவும் பட்டது.

ஜெயகாந்தனின் சிறுகதையொன்றில் குஷ்டரோகி ஒருவன் பிச்சையெடுத்த உணவை உண்டுவிட்டு குறைபட்ட கையால் பீடி பிடித்துக் கொண்டு தனக்குத்தானே அனைத்தையும் ரசித்துக் கொள்வது போல் வரும். காற்றைச் சுகிப்பான்; நிலவை ரசிப்பான்; எச்சில் கலந்த பிச்சைச் சோற்றையும் பாராட்டிக் கொள்வான்.

சரவணன் அபியின் கவிதை இங்கு – காலமருள்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.