அறையை விட்டு வெளியேற மறுக்கிறது வெம்மை
நினைவுகள் சுவரில் மோதி மோதி
தீச்சுவாலைகளாய் என்னைத் தாக்குகின்றன
வெப்பத்தைத் தணிய வைக்க
இல்லாத ஒருவர் வரவேண்டும்
சொல்லாத சொல் ஒன்றைச்
சொல்ல வேண்டும்
செய்யாத செயல் நம்மைத் தாக்கும்போது
செய்த நற்செயல்கள் சாமரம் ஆகி
வெப்பம் தணிக்க வழியேதுமில்லை
மழைச் சாரல் போல் சில்லிடும் நினைவுகள்
எனினும் ஏனோ
வெயில் என் வாழ்வில்