நிறப்பிரிகை: இரண்டு – நீலம்

சரவணன் அபி

விரி வானை
விஞ்சும்
மனிதத்தின்
மனவிரிவு

கைவிரல் பற்றி
படர விடும்
நம்பிக்கை

அமைதியற்ற உயிர்
காத்து நிற்கும்
விடியற் கீற்று

கூரை
தாங்கிப்பிடிக்கும் தரை
சூழவமைந்த குடில்

அகண்டவெளிப் பெருக்கு
அகத்தமைந்த ஞானச்செருக்கு

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.