எதிர்க்கவிதையின் அல்வாப்பதம்

பெருந்தேவி

தலைப்பு செய்தி.

***

ஒரு கோப்பை விஷத்தை வாயிலூற்றி அதை இன்னொரு கோப்பையில் துப்பவேண்டும். இதைச் செய்யும்போது வாயில் நீர் ஊறக் கூடாது விழுங்கக்கூடாது தெறிக்கக்கூடாது. வாய் இடையில் பங்குபெறுகிற சிறு பாத்திரம்தான். இந்தக் கலைச் சூத்திரங்கள் மொழியில் கூடிவர வேண்டும்.

***

மொழியிடம் ஆடுறா ராமா என்று கூவுவது பாவம் உண்மையில் மொழி ரங்கராட்டினம். மேலே ஏறும் போது அச்சமில்லாமல் கீழே இறங்கும்போது ஊக்கம் குறையாமல் இருப்போம். குரங்காட்ட ரசிகர்களிடமிருந்து மொழியைக் காக்கும் கடமை நமக்குண்டு.

***

கவிதையின் பிம்பமல்ல எதிர்க்கவிதை. சூனியக்காரியின் கையிலிருக்கும் கண்ணாடியிலிருந்தும் உள்ளபடி உரைக்காதிருப்பதில் வேறுபடுகிறது எதிர்க்கவிதை. இடம் அதில் ரேகை. காலங்கள் தங்கள் எச்சம்.

***

எதிர்க்கவிதை ஒரு நல்ல நாளில் நாள்பட்ட ஒயின் போலச் சுவைக்கும். மோசமான நாளில் முதல் வரியில் தூங்கவைக்கும்.

***

தமிழுக்குப் பல என்று பேர்.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.